நாடு முழுவதும் கடந்த 13 நாட்களாக பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய அலெக்ஸ்பால் மேனனின் கடத்தல் சம்பவம் இன்று மாலை சுமார் 6,30 மணிக்கு முடிவுக்கு வந்தது. விடுவிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட கடைசி நேரத்திலும் கூட தெளிவான தகவல் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் எகிறிய இதயத் துடிப்பு, அலெக்ஸ் பாலை நேரில் பார்த்த பின்னரே சீரானது. மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பாலை அழைத்துக் கொண்டு தூதர்கள் வந்தார்கள் . ----------------------------------------------------------------------------------------------------
Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது.
அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனர் தெரிவித்தார் ---------------------------------------------------------------------------------------
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 13வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இந்த வேலைநிறுத்தத்தால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் இயக்கபடவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை .------------------------------------------------------------------------------------------------
Posted in: latest news
0 comments:
Post a Comment