Showing posts with label dmk. Show all posts
Showing posts with label dmk. Show all posts

Thursday, May 31, 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்கு பின்னர் அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டெல்லியிலிருந்து

வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, கனிமொழி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, சென்னைக்கு செல்ல கனிமொழிக்கு அனுமதி வழங்கினார். மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் கனிமொழிக்கு விலக்கு அளித்தார்.

Saturday, May 19, 2012

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More