Showing posts with label tamil nadu. Show all posts
Showing posts with label tamil nadu. Show all posts

Saturday, June 30, 2012

Congress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை

கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
2006-ம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போர்கோலா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் 2011-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.
ரூமிநாத், ராகேஷ் சிங் என்பவரை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 வயது மகளும் இருக்கின்றார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த ஜாகி ஜாகிர் என்பவரை கடந்த மாதம் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் ரூமிநாத். இதைத் தொடர்ந்து தமது மனைவியைக் காணவில்லை என்று ராகேஷ்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கரீம்கஞ்ச்சில் நேற்று இரவு ரூமிநாத் தமது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த 200க்கும் மேற்பட்டோர் இருவரையும் அடித்து துவைத்துள்ளனர்.
ரூமி நாத், தனது முதல் கணவரை விவகாரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தலைநகர் கவுகாத்தியில் ரூமிநாத்தும் அவரது இரண்டாவது கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Saturday, June 23, 2012

Montek Singh Ahluwalia justifies toilets upgrade for Rs 35 lakh-கடனும் கழிப்பறையும்

கடனும் கழிப்பறையும்!

'என் தற்கொலைக்குக் காரணம், கரும்பு விவசாயத்துக்காக நான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடன்தான்'
-இப்படி முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டிருக்கிறார்... நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி முருகையன்!
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, சமீபத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, உரிய காலத்தில் கரும்புகள் அறுவடை செய்யப்படாததால்... காய்ந்து வீணாகிப் போயின. 'அறுவடை செய்து கடனைக் கட்டலாம்' என்று காத்திருந்த விவசாயிகள், இதன் காரணமாக கடனாளிகளாக மாறிப் போனார்கள். அவர்களில் ஒருவர்தான், இந்த முருகையன்!
கரும்பு விவசாயிதான் என்றில்லை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனைக்கூட கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நெல் விவசாயி, கோதுமை விவசாயி... என்று தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட நாட்டில்தான்... டெல்லியில் உள்ள திட்டகமிஷன் தலைமை அலுவலகத்தில்
2 கழிப்பறைகளை 35 லட்ச ரூபாய் செலவில் சீரமைத்திருக்கிறார்கள். 'இதற்காக இவ்வளவு செலவிட வேண்டுமா?' என்று கேள்வி எழ, அதை நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார் திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
கழிப்பறைக்கு இப்படி வாரி இறைக்கும் லட்சங்களை வைத்தே... எத்தனையோ விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமே! ஒருவேளை, 'இந்தியா விவசாய நாடு' என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க... 'தற்கொலைகள் தொடரட்டும்' என்று முடிவெடுத்து விட்டார்களோ... ஆட்சியாளர்கள்!
வாழ்க்கை முழுக்க ரத்தம் சிந்தும் விவசாயி, துளி சுகமும் காணாமல் அந்த மண்ணுக்குள்ளேயே போய் கொண்டிருக்க... துளி அழுக்கோ, சிறு வியர்வைக் கசகசப்போ தாங்கள் புழங்கும் கழிப்பறைக்குள்கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக லட்சங்களை இவர்கள் கொட்டிக் கொண்டிருக்க... நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக விதிமுறையோ?!
http://ibnlive.in.com/news/montek-justifies-toilets-upgrade-for-rs-35-lakh/264631-3.html 

Thursday, May 31, 2012

ரூ.28 லட்சத்துக்கு புது பைக் வாங்கினார் டோனி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் டோனி.
 
இதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த 'புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பெருமை பெறுகிறார் டோனி. விளையாட்டு வீரர்களில், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காமிடம் இந்த வகை பைக் உள்ளது.
 
புதிய பைக் குறித்து டோனியின் உறவினர் கவுதம் குப்தா கூறுகையில், 'ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் டோனி 'ஹெல்கேட்' பைக்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். இந்த பைக்கை ராஞ்சிக்கு எடுத்து வருவதற்காக தற்போது டில்லி சென்றுள்ளார் டோனி. மிக விரைவில் பைக்குடன் டோனி ராஞ்சி திரும்ப உள்ளார்' என்றார். 

Tuesday, May 29, 2012

கொலைவெறியுடன் கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகையில், வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறுகி்ன்றனர்.

கடந்த ஆண்டு சமச்சீர் கல்விக் குழப்பத்தால் பள்ளிகள் மறு திறப்பு தாமதமானது. இந்த ஆண்டு வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, May 19, 2012

நாமக்கலில் வருவாய் அதிகாரி வீட்டில் ரெய்டு


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அதிகாரி ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, அதிகாரி ராணி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிகாரி ராணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார்.

சென்னை : நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார். கார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் பலர் கருப்பு பிலிம் ஒட்டுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாதபடியும் கருப்பு பிலிம்களை ஒட்டுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கடத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு தப்பி செல்கின்றனர். இதுதொடர்பான வழக்கில், கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. காரின் முன், பின் பக்க கண்ணாடிகள் 70 சதவீத ஊடுருவு திறன், ஜன்னல் கண்ணாடி 50 சதவீத ஊடுருவு திறனுடன் இருக்க வேண்டும். கூலிங் என்ற பெயரில் இதைவிட அதிக கருமையான பிலிம்களை ஒட்டுவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இந்த உத்தரவு முதலில் அமல்படுத்தப்பட்டது. பெங்களூரில் கார்களில் கருப்பு பிலிம் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் அமல்படுத்தப்பட்டது.

முதல் 2 நாட்கள் கார் டிரைவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. கார்களில் ஒட்டியிருக்கும் பிலிம்களை அகற்றும்படி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தனர். எனினும், பலர் கருப்பு பிலிம்களை  அகற்றவில்லை. போலீஸ் வாகனங்களும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறுகையில், கார்களில் கருப்பு நிற பிலிம்களை மாற்றாத வாகன ஓட்டிகளுக்கு முதலில் ரூ.100, பின்னர் ரூ.300 அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து கருப்பு பிலிம்களுடன் கார் ஓட்டினால் அவர்கள் மீது வேறு நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளித்தால், காருக்குள் நடக்கும் சமூகவிரோத செயல்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும். போலீசாரும், உயர் அதிகாரிகளும் தங்களது காரில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை கட்டாயம் அகற்ற வேண்டும். இல்லை என்றால் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Friday, May 18, 2012

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக கேஸ்: இந்தியா விரைவில் ஒப்பந்தம்

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. Ôஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய கூடாது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் உள்ளதுÕ என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், துருக்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கேஸ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கேஸ் கொண்டு வர பைப் லைன் அமைக்கும் திட்டத்துக்கு இந்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிராந்திய அளவில் உறவு மேம்படும் என்று அமெரிக்க உள்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மே 23 அல்லது 24ம் தேதி இந்தியாவின் கெய்ல் நிறுவனமும் துருக்மேனிஸ்தானின் தேசிய ஆயில் நிறுவனம் டர்னெனும் கையெழுத்திட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, துருக்மேனிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கல்கிநிஷ் ஆயில் கிணற்றில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார், பாகிஸ்தானின் முல்தான் நகர் வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸில்கா என்ற பகுதிக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு வரப்படும். இதற்காக 1,680 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்படும். குழாய் மூலம் கொண்டு வரப்படும் கேஸை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.

Tuesday, May 15, 2012

வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு

ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.

இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில்
எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.

என்.ஐ.டி.யில் எம்.டெக்., எம்.பிளான் சேர்க்கை அறிவிப்பு

இந்தியாவில் திருச்சி, வாரங்கல், பாட்னா உள்ள 21 தேசிய தொழில்நுட்ப மையங்களில் (என்ஐடி) வழங்கப்படும் எம்.டெக்., எம்.பிளான்., படிப்புகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இ செல்லான் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 25ம், இதர வழிகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 29ம் கடைசி நாளாகும்.பொதுக் கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படும். ஸ்கோர் அல்லது கேட் தேர்வு மதிப்பெண்களும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு www.ccmt.in இணையதளத்தைப் பார்க்கவும்.

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்

சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.

• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.

• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More