Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம்.

கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி மழையில் புரண்டு கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

நடந்து முடிந்த 5வது ஐபிஎல் தொடரிலும் தாறுமாறாக வசூல் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குறிப்பாக டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 180 கோடி பணத்தைப் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பல சர்ச்சைகளையும் பார்க்கத் தவறவி்ல்லை ஐந்தாவது ஐபிஎல் தொடர். ஆனால் இதனால் ஐபிஎல்லுக்கு வர வேண்டிய வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், கிரிக்கெட் மீதான மக்களின் மோகம் அந்த அளவுக்கு இருப்பதால்.

டிவி ஒளிபரப்பு மூலம் 16 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்துள்ளனர். மேலும் ரூ. 180 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

Saturday, May 19, 2012

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி ஆதரிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி


குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி

Friday, May 18, 2012

மதன்-ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார்

சென்னை: ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

Tuesday, May 15, 2012

ஜிப்மரில் மே 27ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு

புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இந்நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அனுமதிச் சீட்டையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.மே 27-ம் தேதி பெங்களூர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, புதுச்சேரி, புணே, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய மையங்களில் நடைபெறும். தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மருத்துக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.ஆன்லைனில் அனுமதிச் சீட்டுப் பெற ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, May 12, 2012

ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி


சென்னை, மே 12 : ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம் வெளியிட உள்ளது.

காதுள்ளவன் கேட்கக் கடவன்!

திருத்தேர்களில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் மரணமடைவதும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மின் நிலையம் மூடப்படும் நிலை ஏற்படுவதும் சாதாரண விபத்துகள் என்று கருத முடியவில்லை. இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம்தான்.  தேர்த் திருவிழா நடைபெறும்போது, மின்வாரியத்தின் மூத்த பொறியாளர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் குழு ஒன்று, கோயிலை விட்டுத் தேர் புறப்பட்டு, மீண்டும் நிலைக்குத் திரும்பும் வரை உடன் இருக்கும். தேர் போகும் பாதைகளில் மின்தடை ஏற்படுத்தப்படும். சாலையில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மின்இணைப்புக் கம்பிகளை ஊழியர்கள் கழற்றி வைத்து, தேர் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அந்தக் கம்பிகளைப் பொருத்துவார்கள். ஒவ்வொரு வீதியாகத் தேர் கடந்து செல்லச் செல்ல, கடந்து சென்ற பாதைகளில் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும். இந்தச் சேவைக்காக அந்தக் குழுவுக்குத் தனியாகச் சிறப்புத் தரிசனமும், சிறப்பு மரியாதைகளும் அந்தந்தக் கோயில்களில் உண்டு.  மேலே குறிப்பிட்ட நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவில் உயர்மின்அழுத்தக் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் இறந்திருக்க மாட்டார்கள். விருதுநகர் சென்னங்குடி வெங்கடாசலபதி கோயில் பல்லக்குக் குடைக்கம்பி மின்சாரக் கம்பியில் உரசியபோது 3 இளைஞர்கள் இறந்திருக்க நேரிட்டிருக்காது. அதனால், இந்தச் சம்பவங்கள் மின்வாரியத்தின் மெத்தனப் போக்கு மற்றும் அலட்சியத்தால் நேர்ந்தவைதானே தவிர விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது.  ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர் 56 அடி உயரம் கொண்டது. அத்தகைய தேர் வீதிவலம் வரும்போது, தேர் வரும் பாதையில் மின்சார விநியோகம் தொடர்கிறது என்றால், அதற்கு முழுப் பொறுப்பு மின்வாரிய அதிகாரிகள்தான். மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் அறிவித்ததே தவிர, இந்த மரணத்துக்கு அடிப்படைக் காரணமான மின் ஊழியர்கள் யாரையும் பொறுப்பாக்கவும் இல்லை. நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.  தேருக்கு இந்த நிலைமை என்றால், பல்லக்குக் குடை மின் கம்பியில் உரசி, 3 பேரின் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த அளவுக்கு தாழச் சென்ற மின்கம்பிகளுக்குக் காரணமானவர்கள் யார்? அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை.  ஓர் அரசு விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படும்போது, பந்தல் தீப்பிடித்தால் அணைப்பதற்காக ஒரு தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். மின்கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டால் அதைச் சரி செய்யவும், விழா மேடைக்கு வரும் மின்அளவைச் சரி பார்த்து, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் ஒரு பொறியாளர் தலைமையில் ஒரு குழு நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்பட்டால், ஒரு தாற்காலிக மின்மாற்றியும் நிறுவப்படுகிறது. இவை அனைத்தும் நிகழ்ச்சிக்கு வரும் பிரமுகர்களுக்காக அல்ல. அங்கே கூடும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்காகத்தான். அதே கடமை உணர்வுடன் தேர்த் திருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு குறித்தும் மின்வாரியம் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டாமா?  மின்துறையின் பொறுப்பின்மையின் உச்சகட்டமாக மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தமிழக அரசுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மின்நிலையம் மூடப்படும் நிலைமை உருவானதால், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரட்டைச் செலவு.  அனல்மின் நிலையத்துக்குத் தேவையான எரிபொருளான நிலக்கரியைக் கொண்டு செல்லும் "கன்வேயர் பெல்ட்' தீப்பிடித்து எரிந்ததுதான், மேட்டூர் அனல் மின்நிலையம் முற்றிலுமாகச் சேதம் அடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஓர் அனல் மின்நிலையத்தில், நிலக்கரியைத் தாங்கிச் செல்லும் "கன்வேயர் பெல்ட்' எளிதில் தீப்பற்றக்கூடிய வகையைச் சேர்ந்தது அல்ல. அப்படிப்பட்ட "கன்வேயர் பெல்ட்'டைப் பயன்படுத்த மாட்டார்கள்.  மேலும், அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி என்றும், இவற்றின் எரிதிறன் அதிகம் என்பதாலும், நிலக்கரி வெயிலில் காய்ந்து, ஒன்றோடொன்று உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காரணம் கண்டுபிடிப்பதைப் போன்ற அபத்தம் வேறு ஏதும் இல்லை. இந்த நிலக்கரி எரிதிறன் அதிகமும் சாம்பல் குறைவும் உள்ள ரகம் என்பதால் இவை உடனே தீப்பற்றக்கூடியவை என்று சொல்லப்படும் வாதத்தை, உண்மை அறிந்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த நிலக்கரி அப்படியொன்றும் சாணத்துக்குள் வைத்து ஓலைக் குடிசைகளின் கூரையில் வீசப்படும் "பாஸ்பரஸ்' அல்ல, காய்ந்தவுடன் எரிவதற்கு; கந்தக உருண்டைகளும் அல்ல, உரசியதும் தீப்பற்றிக்கொள்ள! ஆனாலும் இத்தகைய புனைச்சுருட்டுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்மையை மறைக்கப் பார்க்கிறது மின்வாரியம்.  அவர்கள் சொல்வதைப்போன்றே, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெயிலில் காய்ந்து சிறு உராய்வில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்றால், அந்த நிலக்கரி வெயிலில் காயாதபடி சிறப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டாமா? பாதுகாப்பாக நிலக்கரியைக் கையாளாதது யார் குற்றம்? பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகக் காரணமான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?  திருத்தேர் செல்லும் பாதைகளில் மின்சாரம் இருப்பதும், மேட்டூர் அனல் மின்நிலையம் திடீரென்று எரிவதும் வெறும் விபத்து என்று தட்டிக் கழிப்பதற்கில்லை. ஒன்று, மின்வாரியத்தின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக இருக்க முடியும் அல்லது, மின்வாரிய ஊழியர் அமைப்புகளுக்குள், அல்லது அவர்களை வைத்து நடைபெறும் மின்அரசியலாகவும் இருக்கக்கூடும்.  காதுள்ளவன் கேட்கக் கடவன்.

உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறப்போகிறது சென்னை சென்ட்ரல்


புதுடில்லி :"சென்னை சென்ட்ரல் உட்பட, 84 ரயில் நிலையங்கள், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக, நடப்பு நிதியாண்டில் மாற்றப்படும்' என, ராஜ்யசபாவில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி கூறினார்.
ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், அவர் கூறியதாவது:
தரம் உயர்வு:நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில், 266 ரயில் நிலையங்கள், 2011-12ம் ஆண்டில், கண்டறியப்பட்டு, அவற்றை உலகத் தரத்திற்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 73 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக நடப்பு நிதியாண்டில், 84 ரயில் நிலையங்கள், தரம் உயர்த்தப்பட உள்ளன. புதுடில்லி, மும்பை சத்ரபதி சிவாஜி முனையம், மும்பை மற்றும் பாட்னா ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் பிளானும், சாத்தியக் கூறு அறிக்கைகளும் தயாராகியுள்ளன.
நிறுவனங்கள் தேர்வு:இதன் அடுத்த கட்டமாக, சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், ஆனந்த் விகார், சண்டிகார், பிஜ்வாசன், போர்பந்தர், சூரத், ஆமதாபாத், சீல்டா போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளுக்காக ஆலோசனைகளை வழங்குவதற்காக, நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதர ரயில் நிலையங்களில், இதுதொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மண்டல ரயில்வேக்கள் மேற்கொண்டுள்ளன.
நகரும் படிக்கட்டு:பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். தற்போது நூறு நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 221 நகரும் படிக்கட்டுக்களை பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும், 50 நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ளவை அடுத்து வரும் ஆண்டுகளில் அமைக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆன்-லைன் வசதி இலவச சேவையை பயன்படுத்த வேண்டுகோள்



ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச ஆன்-லைன் வசதியை தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பயன்படுத்தும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யவும், விண்ணப்பம் செய்யவும் அறிவிக்கப்பட்ட சேவை மையம், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் நலனை கருதி, தொகுதி-4 பதவியை பொறுத்த வரை, விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விபரங்களையும் நிரந்தரப் பதிவுக்கு மாற்ற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
பதிவு செய்யும் போது கிடைத்துள்ள பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவை, நிரந்தரப் பதிவுக்கான அடையாள எண், பாஸ்வேர்ட் ஆக ஏற்றுக்கொள்ளப்படும். இது ஐந்து ஆண்டுக்கு செல்லத்தக்கது.
நிரந்தரப்பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள், தொகுதி-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப்பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விபரங்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. குறிப்பிட்ட தேர்வுக்கு உரிய கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப்பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்பட மாட்டாது. நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வாணையத்தின் சார்பில், ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய போஸ்ட் ஆஃபீஸ்கள், இந்தியன் வங்கி கிளைகள், தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவச இணைய வழி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசம்.

Naveen Patnaik, Jayalalithaa lavish praise on each other’s pet schemes


On stage and off it, Odisha and Tamil Nadu chief ministers, Naveen Patnaik and J Jayalalithaa, courted each other with open declarations of mutual admiration and respect as they made a joint appearance at the Odisha Foundation Day celebrations at the University of Madras on Friday. Though the context was socio-cultural ties, its political significance was not missed. Members of the Utkal Association of Madras, organizer of the event, were quite excited wondering whether the two CMs, beaming and smiling at the cameras and chatting intermittently, were speaking of matters of political import like the presidential elections in July and a possible formation of a third front.

"We know they are meeting again over lunch and afterwards at Madam Jayalalithaa's Poes Garden residence and so there are possibilities," they said. Jayalalithaa and Patnaik have met twice in Delhi in the recent past, during the two meetings called by the Centre to discuss internal security and the proposed National Counter-Terrorism Centre.

Speaking at the function, the two CMs lavished praise on each other's pet schemes. "There was a natural synergy between Biju Patnaik and me. I thrice hosted him in Tamil Nadu. He was a colossus in politics and was a father figure to me. I am happy to host his son Naveen, who is like a brother to me," Jayalalithaa said. She recalled the "historical links" between the ancient Kalinga and Chola empires. In the current context, she spoke of "acting and prospering together in the federal structure with outcomes leading to larger collective benefit".

After watching a dance troupe from Odisha perform, the two CMs left for the Trade Centre at Nandambakkam where Jayalalithaa hosted over an hour-long luncheon attended by all parties except DMK and DMDK. They then proceeded to Poes Garden where the duo had a 40-minute long private meeting but the media, expecting a major announcement was disappointed.

Jayalalithaa flatly denied there was any discussion about the presidential election. Asked about Patnaik's proposal that she head the sub-committee of CMs on the NCTC, she said it was for the Union home ministry to take a call.

FUNCTION DELAYED BY OVER A MONTH

For the first time in Odisha's history, the state's 76th foundation day was celebrated here on May 11 instead of April 1. "We traditionally celebrate the day on April 1, but due to non-availability of both chief ministers on that date, the function was delayed," a member of the Utkal Association of Madras said. At the centenary auditorium of the Madras university, Tamil Nadu chief minister J Jayalalithaa unveiled the foundation stone of the proposed Odisha Bhavan, which will come up on 12,000 sq ft of land in Velachery. Jayalalithaa honoured eminent Odissi exponent Kumkum Mohanty, snow and sand artist Sudarshan Patnaik, musical stalwarts Vani Jairam and Ilayaraja.

Wednesday, May 9, 2012

காசு கொடுத்து ஆதரவாளரைத் திரட்டவில்லை: நித்யானந்தா


மதுரை ஆதீன புதிய மடாதிபதியாக நிதயானந்தா நியமிக்கப்பட்டது குறித்து ஜெயேந்திரர் தெரிவித்த கருத்துகளுக்கு, மதுரை ஆதீனமும் நித்யானந்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில், புதிய ஆதீனத்தை நியமிப்பது என்னுடைய உரிமை; இதை யாரும் விமர்சிக்க முடியாது; இது குறித்த ஜெயேந்திரரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது என்றார். உடன் இருந்த நித்யானந்தா கூறுகையில், யாரோ சொல்வதைக் கேட்டு ஜெயேந்திரர் கருத்து கூறியிருக்கிறார். ரஞ்சிதா குறித்து தெரிவித்த கருத்துக்களை அவர் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள்; காசு கொடுத்து ஆதரவாளர்களைத் திரட்டும் அவசியம் எனக்கில்லை என்றார்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீவிபத்து -10 சதவீத மின்வெட்டு அதிகரிக்கும்


மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தால் 40 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகி்றது. நிலைமை சீராக 3 வாரம் முதல் 2 மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று காலை மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதால் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூரில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கன்வெயர் பெல்ட் மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்ய 14 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது.

நிலக்கரி யார்டிலிருந்து மின் உற்பத்திக்காக 4 மெயின் கன்வெயர் பெல்ட்களில் இந்த நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெல்ட்டில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில்திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 200 அடி தூரத்திற்கு கன்வெயர் பெல்டில் தீபிடித்தது. இதனால் தீ மளமள எரிந்து அஙகிருந் ஒரு கோபுரத்தில் பற்றியதில் கோபுரம் சரிந்து கீழே விழுந்தது. இந்த தீ பல இடங்களுக்கு பரவியது. இந்த தீ விபத்தில் மின்நிலைய ஊழியர் நல்லதம்பி(50) என்பவர் தீயில் கருகி பலியானர். மேலும் கோபால் , செயற்பொறியாளர் ஒருவர் என இருவர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் தீக்காயம் அதிகமாக இருந்ததால் இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
தீயை அணைக்கும் பணியில் சேலம், மேட்டூர் அனல் மின் நிலைய தீயணைப்புத்துறை ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதில் மேலும் பலக்கு காயம் ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. அனல் மின் நிலையத்தில் 500 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கரியினை கன்வெயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லும் பணியில் தடை ஏற்பட்டுள்ளதால் . மின் உற்பத்தி இன்று காலை 5 மணி முதல் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

மின்வெட்டு அதிகரிக்கும்: ‌நேற்றுநள்ளிரவில் நடந்த தீவிபத்தால் மேட்டூர் அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி தடை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5 முதல் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தீவிபத்தால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய 1 மாதம் ஆகும் என்பதால் மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது மேட்டூர், இடைப்பாடி, பவானி ,சேலம் உள்பட பல பகுதிகளிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 வீரர்கள் தீயை அதணத்தனர். 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் 800 மீ. நீளமுள்ள கன்வெயர் பெல்ட் தீயில் கருகி சேதமடைந்தது. இருப்பினும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது

10 சதவீத மின்வெட்டு அதிகரிப்பு: தமிழகத்தில்மின்தேவை 12,500 மெகாவாட் ஆகும். தற்போது 8,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மின்பற்றாகுறை மின்வெட்டு மூலம் சரிசெய்யப்படுகிறது. அதன்படி மேட்டூரிலிருந்து பெறப்படும் மின்சாரம் 840 மெகாவாட் ஆகும். இது 10 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. நேற்று ஏற்பட்ட தீவிபத்தினால் மின்உற்பத்தி தடை ஏற்பட்டதில் கூடுதலாக 10 சதவீத மின்வெட்டு அதிகரிக்கும் எனஎதிர்க்கப்படுகிறது..

Tuesday, May 8, 2012

இடிந்தகரையில் 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிப்பு

வள்ளியூர், மே 8: அணுஉலையை எதிர்த்து இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் மக்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவை புதன்கிழமை ராதாபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடம் அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சு வார்த்தைக்கும் வராததையடுத்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தனர்.  அதன்படி இடிந்தகரை, தோமையார்புரம், பெருமணல், கூடுதாழை, கூடங்குளம், வைராவிக்கிணறு, கூத்தங்குழி, கூட்டப்பனை, ஆவுடையாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  இதுவரை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் தெரிவித்தார். இது தவிர அணுஉலை வேண்டாம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.  கையெழுத்திடப்பட்ட நோட்டுகளையும் கிராம மக்கள் போராட்டக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் நோட்டில் போடப்பட்டுள்ள கையெழுத்தின் அருகே தங்களது குடும்பஅட்டையின் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த கையெழுத்து நோட்டை நீதிமன்றங்களில் நீதிபதிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.  மதிப்புமிக்க இந்தியா இயக்கம் தொடக்கம்: இந்த நிலையில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மதிப்புமிக்க இந்தியா என்ற இயக்கத்தை இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.  இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:  கூடங்குளம் அணு உலை வேண்டாம் என அணுஉலை அமைத்திருக்கின்ற பகுதி மக்களும், பிற பகுதியில் இருக்கும் மக்களும் ஒருமித்த குரல் கொடுத்துவரும் நிலையில், ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துகள் ஏற்கப்படவில்லை. எனவே, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம்.  இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 7 இடங்களில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றார்.

கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்



கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்

  09 May 2012


 திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.  பாதுகாப்பு பிரச்னைக்காக மட்டுமின்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

சென்னை, மே.9: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ல் 138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4 பதவிகளில் அடங்கியுள்ள 138 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அதிகாரி-19 இடங்கள், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் 111(28 பின்னடைவு காலி பணியிடங்கள்),வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஸ்டோர் கீப்பர்- 7, தொழிற்சாலை கூட்டுறவு சங்க உதவி மேற்பார்வையாளர்-1 ஆகிய இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஜூன் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது. இந்த பதவிகளுக்கான வயது, கல்வி தகுதிகள், பொது தகவல்கள், தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், வழிகாட்டல்கள், சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களை போட்டி தேர்வாளர்கள் தேர்வாணைய இணையதள முகவரியான www.tnpsc.gov.in மற்றும் www. tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 15% கூடுதல் கட்டணம்: இணையதளத்தில் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு தனித்தனியே கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டது. இந்த கட்டணத்தை எதிர்த்து 384 தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ’நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து 2.5.2012-க்குள் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டும் 2012-2013-ம் கல்வி ஆண்டுக்கு மட்டும் இடைக்கால ஏற்பாடாக அந்த குழு நிர்ணயித்த கட்டணத்துடன் 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதைத்தொடர்ந்து, கட்டணத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணம் மற்றும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த 15 சதவீத கூடுதல் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில், கூடுதல் 15 சதவீத கட்டணம் வசூலிக்கும் 384 பள்ளிகளின் பட்டியல் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
 
இதுதொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து சில தனியார் பள்ளிகளால் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெறப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் பொதுமக்கள், பெற்றோர் நலன் கருதி இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

Monday, May 7, 2012

SRM University cancels SRMEE 2012 exam in AP after leak

CHENNAI: The SRM University has cancelled the entrance examination for BTech courses conducted on Sunday for entire Andhra Pradesh following a question paper leak.
Vice-Chancellor of SRM M Ponnavaikko told Express that the university was now in close contact with AP police who have arrested two persons in connection with the leak.
A decision on whether to cancel the examination for the entire country would be made if instances of question paper leak in other states come to notice, he added.
Meanwhile, the Madhapur police in Andhra Pradesh said they have arrested K Praneeth, a former student of the university, after parents of some students found him selling the answer key for the examination for Rs 60,000. Praneeth passed out of the university in 2011.
Registrar N Sethuraman said that about 30,000 students appeared for the examination in over 60 centres in Andhra Pradesh.

Tuesday, April 24, 2012

The Kudankulam nuclear power project is expected to start generating electricity in the next 40 days

The first unit of the Kudankulam nuclear power project is expected to start generating electricity in the next 40 days, minister of state in the Prime Minister's Office V Narayanasamy said on Monday.
He said the Atomic Energy Regulatory Board (AERB) officials were at the Kudankulam project site and inspecting the plant.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More