Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Wednesday, June 27, 2012

Pranab Mukherjee's last day as Finance Minister-பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற சற்றே இறுக்கமான நாளாக

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை...

நிதியமைச்சராக 3 முறை இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1977ம் ஆண்டு அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அவரது அமைச்சர் பதவியும் போனது. பின்னர் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் கழித்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் பிரணாப்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடைசி முறையாக நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தை விட்டு வெளியேறினார் பிரணாப். இனிமேல் அவர் நார்த் பிளாக்குக்கு வர மாட்டார் என்ற நினைவே அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதை செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார் பிரணாப்.

செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி உணர்ச்சி பொங்க பேசியதிலிருந்து சில பகுதிகள்...

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் ஒரு அமைச்சராக கடைசி நாளில் நான் இங்கு நிற்கிறேன்.எனவே நிறைய பேச முடியாது, நேரமில்லை.

நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் இந்த தருணத்தில், நெஞ்சம் நிறைந்த, மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இங்கிருந்து செல்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் பதவி வகித்த இந்த காலத்தில் நான் எடுத்த அத்தனை முடிவுகளுமே சரியானதுதான் என்று கூற மாட்டேன். அதேசமயம், நான் எந்த முடிவை எடுத்தாலும், அதை நான் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மனதில் கொண்டுதான் எடுத்தேன்.

எனது வாழ்க்கையில், நான் நீண்ட தூரம் வந்து விட்டேன். இருந்தாலும், எந்த உயரத்திற்குப் போனாலும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை. எனக்கு நானே அதை அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

எனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சிபிஎம், பார்வர்ட் பிளாக் என அத்தனை கட்சிகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் பிரணாப்.

இத்தனை ஆண்டு கால அரசியல்வாழ்க்கையில் பத்திரிக்கையாளர்கள் உங்களிடம் பழகிய விதம், அவர்களுடனான உங்களது அனுபவம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனது பாணியில், இனிமேல் காரில் ஏறப் போகும்போது வழிமறித்து கேள்வி கேட்பது, அமைச்சகத்திலிருந்து வெளியே வரும்போது கேள்வி கேட்பது ஆகியவை இருக்காது... என்றார் சிரித்தபடி.

நேற்று தனது கடைசி அரசியல் நாள் என்பதால் காலையிலேயே எழுந்து வழக்கமான பூஜையை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்தார் பிரணாப். கடைசி நாளிலும் அவர் சில கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டார். பின்னர் தனது துறை அதிகாரிகளைச் சந்தித்தார். அனைவருக்கும் குட்பை சொன்னார். பின்னர் அலுவலகத்திலேயே, வழக்கமான தனது பிற்பகல் தூக்கத்தை போட்டார். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அங்கு லைனாக நின்றிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் கடைசி முறையாக வணக்கம் சொல்லி விடை பெற்றார். பின்னர் பத்திரிக்கையாளர்களும் பிரணாப்பிடம் சென்று விடை பெற்றனர். அப்போது பல பத்திரிக்கையாளர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் பிரணாப் முகர்ஜியை வளைத்து வளைத்துப் படம் பிடித்தனர். அதைப் பார்த்த பிரணாப், இப்போதெல்லாம் படம் எடுக்கிறது ரொம்ப ஈசியாப் போச்சுல்ல என்றார் சிரித்த்படி.

நேற்றைய நாளில் ஒரு முக்கிய விஐபி திடீரென பிரணாப்பை சந்திக்க வந்தார். அவர் ராகுல் காந்தி. பிற்பகல் 1.30 மணியளவில் வந்த ராகுல், 3.30 மணி வரை பிரணாப்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் தான் இணைந்து பணியாற்றிய அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம் பிரணாப்.

எப்போதும் டென்ஷனாகவே காணப்படும் பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் சற்றே இறுக்கமான நாளாக மாறி விட்டது. கடைசி முறையாக அரசியலிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற நேற்றைய நாளை மிகவும் உணர்ச்சிகரமாக முடித்து புதிய அத்தியாயத்தை நாளை தொடங்கப் போகிறார் பிரணாப் முகர்ஜி.

Thursday, June 21, 2012

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21-

மெக்சிகோவில் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ‘ரியோ பிளஸ் 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே இன்று மன்மோகன் சிங் சீன பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படும் பாஸ்மதி அரிசியை சீனாவுக்கு இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை 2006-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்துக்கு சீன பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Friday, June 8, 2012

பத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு:கொள்ளையர்கள் நுழைய வாய்ப்பா?

 
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை பொக்கிஷங்களை கணக்கிட மதிப்பீடு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இதன்படி பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள நிலவறைகளில் உள்ள பழங்கால விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
 
இதனிடையே பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியும் அதனையொட்டியும் ரகசிய சுரங்கபாதைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கபாதைகள் திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் இருந்து கோவிலை நோக்கி செல்வதாக அமைந்துள்ளது. தற்போது இந்த சுரங்கபாதைகளில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வை தொடங்கி உள்ளனர்.
 
பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனைக்கு செல்லும் சுரங்கபாதை மற்றும் கோவிலின் அடியில் இருந்து வேறு கோவில்களுக்குமான இணைப்பு சுரங்க பாதை களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கேரள தொல்பொருள் துறை ஆய்வு அதிகாரி ஜெயகுமார் தலைமையில் அதிசக்தி வாய்ந்த மின் விளக்கு வசதிகளுடன் கடந்த 3 வாரங்களாக இப்பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு குழுவினர் கூறியதாவது:-
 
பத்மநாபசுவாமி கோவிலின் அடிப்பகுதியில் இருந்து மன்னர் வசிக்கும் அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதையில் முதலில் ஆய்வு பணி நடக்கிறது. இந்த சுரங்கபாதை மூலம் பாதாள அறைகளுக்கு கொள்ளையர்கள் யாராவது புகமுடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டது.
 
இதே போன்று பத்மநாபசுவாமி கோவிலுக்கும் வேறு சில கோவில்களுக்கும் இடையே இணைப்பு சுரங்கபாதைகள் உள்ளது. அவற்றிலும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம்.

கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி மழையில் புரண்டு கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

நடந்து முடிந்த 5வது ஐபிஎல் தொடரிலும் தாறுமாறாக வசூல் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குறிப்பாக டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 180 கோடி பணத்தைப் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பல சர்ச்சைகளையும் பார்க்கத் தவறவி்ல்லை ஐந்தாவது ஐபிஎல் தொடர். ஆனால் இதனால் ஐபிஎல்லுக்கு வர வேண்டிய வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், கிரிக்கெட் மீதான மக்களின் மோகம் அந்த அளவுக்கு இருப்பதால்.

டிவி ஒளிபரப்பு மூலம் 16 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்துள்ளனர். மேலும் ரூ. 180 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, May 18, 2012

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக கேஸ்: இந்தியா விரைவில் ஒப்பந்தம்

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. Ôஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய கூடாது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் உள்ளதுÕ என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், துருக்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கேஸ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கேஸ் கொண்டு வர பைப் லைன் அமைக்கும் திட்டத்துக்கு இந்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிராந்திய அளவில் உறவு மேம்படும் என்று அமெரிக்க உள்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மே 23 அல்லது 24ம் தேதி இந்தியாவின் கெய்ல் நிறுவனமும் துருக்மேனிஸ்தானின் தேசிய ஆயில் நிறுவனம் டர்னெனும் கையெழுத்திட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, துருக்மேனிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கல்கிநிஷ் ஆயில் கிணற்றில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார், பாகிஸ்தானின் முல்தான் நகர் வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸில்கா என்ற பகுதிக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு வரப்படும். இதற்காக 1,680 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்படும். குழாய் மூலம் கொண்டு வரப்படும் கேஸை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.

Saturday, May 12, 2012

திரிபுரா ,மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக ஐகோர்ட்டுகள‌ை உருவாக்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது

புதுடில்லி:திரிபுரா ,மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக ஐகோர்ட்டுகள‌ை உருவாக்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது. இதுகுறித்து திரிபுரா சட்டத்துறை செயலாளர் தத்தாமோகன்ஜமாத்தியா கூறு்கையில்‌ லோக்சபாவில் அனுமதி பெற்றப்பட்டதையடுத்து நீதிமன்றம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார். தற்போது லோக்சபாவில் நிறை‌வேற்றப்பட்ட இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனு்ப்பிவைக்கப்படும். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்திற்கு மட்டுமே தனியாக ஐகோர்ட்உள்ளது மற்ற ஆறு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் நாகலாந்து மற்றும் அருணாசலபிரதேச மாநிலங்களுக்கான வழக்குகள் அனைத்தும் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, May 9, 2012

சிறை தண்டனையை எதிர்த்து மாஜி மத்திய அமைச்சர் மனு


புதுடில்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய ராணுவ அமைச்சர் பங்காரு லட்சுமணன், தண்டனையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.
முன்னாள் ராணுவ அமைச்சரும், பா.., முன்னாள் தலைவருமான பங்காரு லட்சுமணன், 11 ஆண்டுகளுக்கு முன், ராணுவத்திற்கு அதிநவீன பைனாகுலர்கள் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அவர் லஞ்சம் வாங்குவதை தனியார் இணையதள நிறுவனம், ரகசிய கேமராவில் படமெடுத்து வெளியிட்டது.

இதுகுறித்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை 11 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 28ம் தேதி, இவ்வழக்கில் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக்கோரி, அவர் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, நாளை (11ம் தேதி) விசாரணைக்கு வரும் என அவரது வழக்கறிஞர் அதுல் குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனை நீக்க வேண்டும் என்று கோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் கே.ஜி., பாலகிருஷ்ணன் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தனது உறவினர்கள் பேரில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி SH KAPADIA தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.ஜி. பாலகிருஷ்ணன் பெயரில் சொத்துகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாலகிருஷ்ணன் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேடுகள் தொடர்பாக, தகுந்த அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000ம் ஆண்டு ஜூன் மாதம் கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 மே மாதம் ஓய்வு பெற்ற பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More