Showing posts with label latest news. Show all posts
Showing posts with label latest news. Show all posts

Thursday, May 24, 2012

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்தில் பங்குபெற ஜப்பான் ஆர்வம்

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஜப்பான் பங்கு பெற ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால திட்டங்களான மோனோ ரெயில் மற்றும் நகர போக்குவரத்து போன்ற திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
 
நகர மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் கமல்நாத், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே ஜப்பான் கலந்து கொண்டு இருப்பதை குறிப்பிட்டவர், தற்போது இத்திட்டம் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளது. நான்காவது கட்ட நிலையிலும் ஜப்பான் பங்கு பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது.
 
மேலும், மூன்றாம் கட்ட நிலை முடிவடைந்ததும் அடுத்த நிலை தொடங்கப்படும். நான்காவது கட்ட நிலையில் சுமார் 440 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
 
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரெயில் திட்டம் டெல்லி மெட்ரோ ரெயில் திட்டமாகத்தான் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
டெல்லி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளின் கடந்த மூன்று நிலைகளிலும் ஜப்பான் பங்கு பெற்று இருந்தது. இத்திட்டத்திற்கு ஜப்பான் ரூ. 14,000 கோடி கடன் வழங்கியது. அது இத்திட்டத்தின் மொத்த அளவில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 19, 2012

நாமக்கலில் வருவாய் அதிகாரி வீட்டில் ரெய்டு


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அதிகாரி ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, அதிகாரி ராணி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிகாரி ராணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Saturday, May 12, 2012

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆன்-லைன் வசதி இலவச சேவையை பயன்படுத்த வேண்டுகோள்



ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச ஆன்-லைன் வசதியை தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பயன்படுத்தும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யவும், விண்ணப்பம் செய்யவும் அறிவிக்கப்பட்ட சேவை மையம், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் நலனை கருதி, தொகுதி-4 பதவியை பொறுத்த வரை, விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விபரங்களையும் நிரந்தரப் பதிவுக்கு மாற்ற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
பதிவு செய்யும் போது கிடைத்துள்ள பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவை, நிரந்தரப் பதிவுக்கான அடையாள எண், பாஸ்வேர்ட் ஆக ஏற்றுக்கொள்ளப்படும். இது ஐந்து ஆண்டுக்கு செல்லத்தக்கது.
நிரந்தரப்பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள், தொகுதி-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப்பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விபரங்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. குறிப்பிட்ட தேர்வுக்கு உரிய கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப்பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்பட மாட்டாது. நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வாணையத்தின் சார்பில், ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய போஸ்ட் ஆஃபீஸ்கள், இந்தியன் வங்கி கிளைகள், தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவச இணைய வழி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசம்.

Tuesday, May 8, 2012

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்குப் பின்னடைவு

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்குப் பின்னடைவு

09 May 2012

 கொழும்பு, மே 8: போர்க் குற்ற மீறலுக்காக சர்வதேச சமூகம் தன்னைக் கண்டிப்பதற்கு முன்னால், 3 மாகாணங்களின் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தி தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிரூபித்துவிடலாம் என்று திட்டமிட்ட இலங்கை அதிபர் ராஜபட்சவின் அரசியல் வியூகத்துக்கு அணை போட்டுவிட்டது வட மத்திய மாகாண உயர் நீதிமன்றம்.  மாகாண சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் அதைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கூடாது என்று வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துள கருணரத்ன தடை விதித்துவிட்டார்.  இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாகாண சட்டப் பேரவை உறுப்பினர் அனில் ரத்னாயக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  வட மத்திய மாகாணத்தின் பதவிக்காலம் 2013 செப்டம்பர் 17-ம் தேதிதான் முடிகிறது என்றாலும் அரசியல் உள்நோக்கத்துடன் அதை உரிய காலத்துக்கு முன்னதாகவே கலைத்துவிட அதிபர் திட்டமிட்டு வருகிறார் என்று ரத்னாயக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் 3 மாகாண சட்டப் பேரவைகளைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாமா என்று வடக்கு மத்திய, சபரகமுவ, கிழக்கு மாகாண முதலமைச்சர்களுடன் அதிபர் ராஜபட்ச ஆலோசனை செய்துகொண்டிருந்த நேரத்திலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.  வடக்கு மத்திய, சபரகமுவ மாகாணக் கவுன்சில்களின் பதவிக்காலம் 2013 ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலத்தில்தான் முடிகிறது.  கிழக்கு மாகாணக் கவுன்சிலின் பதவிக்காலம் 2013 மே மாதம் முடிகிறது.  காரணம் என்ன? இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரை வெற்றிகரமாக முடித்துவிட்டார் என்ற எண்ணம் சிங்களர்களிடையே இன்னமும் நீடிப்பதால் ராஜபட்சவை சக்திவாய்ந்த தலைவராக அவர்கள் கருதுகின்றனர்.  இந்த நினைப்பு இருக்கும்வரை அரசியல் செல்வாக்கும் இருக்கும் என்பதால், பொருளாதாரப் பிரச்னைகளால் செல்வாக்கு சரியும் முன்னால் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ராஜபட்ச கருதுகிறார்.  அத்துடன் சர்வதேச அரங்கில் போர்க்குற்றச் செயல்களுக்காக தன்னைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ சர்வதேசச் சமூகம் முயன்றால் சிங்களர், தமிழர், தமிழ் முஸ்லிம்களின் பகுதிகளிலும் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள இந்தத் தேர்தல் முடிவுகள் உதவும் என்று கணித்தார்.  வடக்கு மத்திய மாகாணத்திலும் சபரகமுவ மாகாணத்திலும் சிங்களர்கள்தான் பெரும்பான்மைச் சமூகத்தவராக இருக்கின்றனர். இலங்கையின் கிழக்கில் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் கணிசமாக இருக்கின்றனர்.  அங்கு தேர்தல் எப்படி நடந்தாலும் தேர்தல் முடிவுகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் தன்னை அரசியல் செல்வாக்கு உள்ளவராகக் காட்டிக்கொள்ள இந்தத் தேர்தல்கள் உதவும் என்று ராஜபட்ச திட்டமிட்டுச் செயல்படுகிறார்.  போர்க்குற்றச் செயல்கள், போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், இன ஒடுக்கல் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் முன்பு வரும் அக்டோபர், நவம்பரில் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்குள் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டால் சர்வதேசச் சமூகம் தன்னைக் கண்டிக்கத் தயங்கும் என்று ராஜபட்ச கருதுகிறார்.

கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்



கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்

  09 May 2012


 திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.  பாதுகாப்பு பிரச்னைக்காக மட்டுமின்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

சென்னை, மே.9: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ல் 138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4 பதவிகளில் அடங்கியுள்ள 138 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அதிகாரி-19 இடங்கள், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் 111(28 பின்னடைவு காலி பணியிடங்கள்),வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஸ்டோர் கீப்பர்- 7, தொழிற்சாலை கூட்டுறவு சங்க உதவி மேற்பார்வையாளர்-1 ஆகிய இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஜூன் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது. இந்த பதவிகளுக்கான வயது, கல்வி தகுதிகள், பொது தகவல்கள், தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், வழிகாட்டல்கள், சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களை போட்டி தேர்வாளர்கள் தேர்வாணைய இணையதள முகவரியான www.tnpsc.gov.in மற்றும் www. tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Thursday, May 3, 2012

தமிழகம் இன்று









நாடு முழுவதும் கடந்த 13 நாட்களாக பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய அலெக்ஸ்பால் மேனனின் கடத்தல் சம்பவம்  இன்று மாலை சுமார் 6,30 மணிக்கு முடிவுக்கு வந்தது. விடுவிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட கடைசி நேரத்திலும் கூட தெளிவான தகவல் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் எகிறிய இதயத் துடிப்பு, அலெக்ஸ் பாலை நேரில் பார்த்த பின்னரே சீரானது. மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பாலை அழைத்துக் கொண்டு தூதர்கள் வந்தார்கள் .  ----------------------------------------------------------------------------------------------------     





  






 
          Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது.    அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனர் தெரிவித்தார்  --------------------------------------------------------------------------------------- 






  வரி உயர்வு நடவடிக்கை மூலம் தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு போராடி வரும் நிலையில், பெண்கள் நகை வாங்குவதை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்க நகை வாங்கினால் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய மதிப்புமிக்க கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.   ------------------------------------------------------------------------------------------------------- 






 இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது. தமிழில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்கள் ஐந்து விருதுகளை பெற்றுள்ளன. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. --------------------------------------------------------------------------------------------------- 







நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
      இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கும் சூழலில் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடருமானால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளார்.






நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 13வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இந்த வேலைநிறுத்தத்தால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் இயக்கபடவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை .------------------------------------------------------------------------------------------------ 






மதுரை ஆதினத்தின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைய மடாதிபதி நித்தியானந்தா நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் கவுதமன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்ணன்,ரவிச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தனர். நித்தியானந்தா இளைய மடாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மதுரை ஆதினத்தில் இருந்த நிலையே தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More