Showing posts with label petrol price hike. Show all posts
Showing posts with label petrol price hike. Show all posts

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும்: மத்திய அரசு யோசனை

புதுடெல்லி, மே. 24-
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசு அதற்கு பரிகாரம் காணும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.  
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அபரிதமான சுமையை குறைக்க மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால், மத்திய அரசு தனக்குரிய வரியை குறைக்கலாம். ஆனால் தனக்கு வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே மாநிலங்களிடம் வரியை குறையுங்கள் என்று மத்திய அரசு கூறத்தொடங்கி உள்ளது. டெல்லி, அரியானா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த 10 மாநில முதல்- மந்திரிகளிடம் வரியை குறைக்கும்படி மேலிடத் தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏற்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் முதல்-மாநிலமாக வரியை குறைத்துள்ளது.   மேற்கு வங்கம், மராட்டியம், கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்பார்களா? என்று தெரியவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைப்பார்களா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More