Showing posts with label by election. Show all posts
Showing posts with label by election. Show all posts

Saturday, May 26, 2012

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்துவிட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என அறிவித்தது. தொடர்ந்து பா.ம.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது. முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வும் போட்டியிடாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஐக்கிய ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட கட்சி தலைராக இருக்கும் சீனிவாசன் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Saturday, May 19, 2012

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More