Showing posts with label tamilnadu news. Show all posts
Showing posts with label tamilnadu news. Show all posts

Saturday, July 7, 2012

Tamilnadu all party leders wants training for Sri Lankan personnel scrapped/இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு

"மழை விட்டும் தூவானம் விடவில்லை'இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்த வாசகம் இது. அதே போல், தமிழக அரசியல் களத்தில், இலங்கை பிரச்னை,

"தூவானமாய்' தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி என்ற விவகாரம் மூலம், தமிழக அரசியல் கட்சிகளிடையே, மீண்டும் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது.

நெருக்கடி :இலங்கையில் இறுதி யுத்தம் நடந்து முடிந்தபின், ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழுவில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும் என, தமிழக கட்சிகள் ஒரு சேர வலியுறுத்தின. இந்த நெருக்கடியால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஒட்டளித்தது மத்திய அரசு.கடந்த சில வாரங்களுக்கு முன், இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க, "தனி ஈழத்துக்கு, தமிழகத்தில், ஆதரவு குரல் கொடுக்காதீர்கள்; மீறினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் அழிக்கப்படுவர்' என, எச்சரிக்கை விடுக்க, மீண்டும் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.

பிரதமர் பதில்:இதற்கு பதிலளிக்கும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "ரியோடி ஜெனிரோவில் நடந்த மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தேன். அப்போது, இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்கவின் எச்சரிக்கும் பேச்சை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்கள் சம உரிமையுடன் வாழ, இலங்கைக்குள்ளேயே அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்' என்று பதில் அளித்துள்ளார்.அடுத்ததாய், தமிழக மீனவர்கள் விவகாரம். கடந்த ஒரு மாதத்தில், நான்கு முறைக்கு மேல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு, ஆளாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பிடித்து செல்லப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், பிரதமர் மன்மோகனுக்கு கடிதங்களை எழுதினர்.

மீனவர் விடுவிப்பு:பிடிபட்டவர்களில் 13 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால், மீனவர் விஷயத்திலும், மத்திய அரசு கொஞ்சம் செயல்படத் துவங்கியுள்ளது.தொடர் வலியுறுத்தல் காரணமாக, "தமிழக மீனவர்கள் தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல் எல்லையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்' என, தென் மண்டல கடலோர காவல் படை காமாண்டர் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக, இலங்கை கடற்படையினருடன், அடுத்த மாதம் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "காரைக்காலில் ரேடார் வசதியுடனும், கண்காணிப்பு ரோந்து விமானங்களை கொண்ட புதிய மையம் திறக்கப்பட உள்ளதாகவும்' சர்மா தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் பயிற்சி:இந்த சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்.ஒட்டுமொத்தமாக எழுந்த இந்த எதிர்ப்பால், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்தியுள்ளது. இலங்கை வீரர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிப்பதை, வேறு மாநிலங்களில் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், இலங்கை வீரர்களை, மத்திய அரசு திருப்பியனுப்பி உள்ளது.

ஆளுங்கட்சிக்கு வெற்றி:இலங்கை பிரச்னை தொடர்பாக, கடந்த தி.மு.க., ஆட்சியில் போராட்டங்கள், அறிக்கைகள், கடிதங்கள் என பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இலங்கை விவகாரத்தில், பட்டும் படாமல் ஒதுங்கி வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது தீவிர ஆர்வம் காட்டுவதால்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.போரில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு, மறு குடியமர்த்தல், இலங்கை குடிமகனாக வாழ, சரிநிகர் சம அந்தஸ்து ஆகியவற்றை அளிக்க, இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்; அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்திலும், மத்திய அரசை, வலுவாக நிர்பந்திக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.


இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு 

Wednesday, June 27, 2012

Pranab Mukherjee's last day as Finance Minister-பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற சற்றே இறுக்கமான நாளாக

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை...

நிதியமைச்சராக 3 முறை இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1977ம் ஆண்டு அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அவரது அமைச்சர் பதவியும் போனது. பின்னர் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் கழித்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் பிரணாப்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடைசி முறையாக நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தை விட்டு வெளியேறினார் பிரணாப். இனிமேல் அவர் நார்த் பிளாக்குக்கு வர மாட்டார் என்ற நினைவே அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதை செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார் பிரணாப்.

செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி உணர்ச்சி பொங்க பேசியதிலிருந்து சில பகுதிகள்...

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் ஒரு அமைச்சராக கடைசி நாளில் நான் இங்கு நிற்கிறேன்.எனவே நிறைய பேச முடியாது, நேரமில்லை.

நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் இந்த தருணத்தில், நெஞ்சம் நிறைந்த, மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இங்கிருந்து செல்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் பதவி வகித்த இந்த காலத்தில் நான் எடுத்த அத்தனை முடிவுகளுமே சரியானதுதான் என்று கூற மாட்டேன். அதேசமயம், நான் எந்த முடிவை எடுத்தாலும், அதை நான் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மனதில் கொண்டுதான் எடுத்தேன்.

எனது வாழ்க்கையில், நான் நீண்ட தூரம் வந்து விட்டேன். இருந்தாலும், எந்த உயரத்திற்குப் போனாலும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை. எனக்கு நானே அதை அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

எனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சிபிஎம், பார்வர்ட் பிளாக் என அத்தனை கட்சிகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் பிரணாப்.

இத்தனை ஆண்டு கால அரசியல்வாழ்க்கையில் பத்திரிக்கையாளர்கள் உங்களிடம் பழகிய விதம், அவர்களுடனான உங்களது அனுபவம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனது பாணியில், இனிமேல் காரில் ஏறப் போகும்போது வழிமறித்து கேள்வி கேட்பது, அமைச்சகத்திலிருந்து வெளியே வரும்போது கேள்வி கேட்பது ஆகியவை இருக்காது... என்றார் சிரித்தபடி.

நேற்று தனது கடைசி அரசியல் நாள் என்பதால் காலையிலேயே எழுந்து வழக்கமான பூஜையை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்தார் பிரணாப். கடைசி நாளிலும் அவர் சில கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டார். பின்னர் தனது துறை அதிகாரிகளைச் சந்தித்தார். அனைவருக்கும் குட்பை சொன்னார். பின்னர் அலுவலகத்திலேயே, வழக்கமான தனது பிற்பகல் தூக்கத்தை போட்டார். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அங்கு லைனாக நின்றிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் கடைசி முறையாக வணக்கம் சொல்லி விடை பெற்றார். பின்னர் பத்திரிக்கையாளர்களும் பிரணாப்பிடம் சென்று விடை பெற்றனர். அப்போது பல பத்திரிக்கையாளர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் பிரணாப் முகர்ஜியை வளைத்து வளைத்துப் படம் பிடித்தனர். அதைப் பார்த்த பிரணாப், இப்போதெல்லாம் படம் எடுக்கிறது ரொம்ப ஈசியாப் போச்சுல்ல என்றார் சிரித்த்படி.

நேற்றைய நாளில் ஒரு முக்கிய விஐபி திடீரென பிரணாப்பை சந்திக்க வந்தார். அவர் ராகுல் காந்தி. பிற்பகல் 1.30 மணியளவில் வந்த ராகுல், 3.30 மணி வரை பிரணாப்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் தான் இணைந்து பணியாற்றிய அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம் பிரணாப்.

எப்போதும் டென்ஷனாகவே காணப்படும் பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் சற்றே இறுக்கமான நாளாக மாறி விட்டது. கடைசி முறையாக அரசியலிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற நேற்றைய நாளை மிகவும் உணர்ச்சிகரமாக முடித்து புதிய அத்தியாயத்தை நாளை தொடங்கப் போகிறார் பிரணாப் முகர்ஜி.

Friday, June 8, 2012

பத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு:கொள்ளையர்கள் நுழைய வாய்ப்பா?

 
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை பொக்கிஷங்களை கணக்கிட மதிப்பீடு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இதன்படி பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள நிலவறைகளில் உள்ள பழங்கால விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
 
இதனிடையே பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியும் அதனையொட்டியும் ரகசிய சுரங்கபாதைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கபாதைகள் திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் இருந்து கோவிலை நோக்கி செல்வதாக அமைந்துள்ளது. தற்போது இந்த சுரங்கபாதைகளில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வை தொடங்கி உள்ளனர்.
 
பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனைக்கு செல்லும் சுரங்கபாதை மற்றும் கோவிலின் அடியில் இருந்து வேறு கோவில்களுக்குமான இணைப்பு சுரங்க பாதை களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கேரள தொல்பொருள் துறை ஆய்வு அதிகாரி ஜெயகுமார் தலைமையில் அதிசக்தி வாய்ந்த மின் விளக்கு வசதிகளுடன் கடந்த 3 வாரங்களாக இப்பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு குழுவினர் கூறியதாவது:-
 
பத்மநாபசுவாமி கோவிலின் அடிப்பகுதியில் இருந்து மன்னர் வசிக்கும் அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதையில் முதலில் ஆய்வு பணி நடக்கிறது. இந்த சுரங்கபாதை மூலம் பாதாள அறைகளுக்கு கொள்ளையர்கள் யாராவது புகமுடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டது.
 
இதே போன்று பத்மநாபசுவாமி கோவிலுக்கும் வேறு சில கோவில்களுக்கும் இடையே இணைப்பு சுரங்கபாதைகள் உள்ளது. அவற்றிலும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

Friday, June 1, 2012

ஆனந்துக்கு ரூ.2 கோடி: முதல்வர்

சென்னை, ஜூன் 1: உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

Saturday, May 26, 2012

அரிசியில் கவனம்

அரிசியில் கவனம்

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு "டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் மிக முக்கிய உணவாக, அரிசி உணவையே நாள் தோறும் உண்கின்றனர். எனவே அவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிக அளவில் கிலைசிமிக்ஸ் இன்டக்ஸ் உள்ளது. அதில் எந்த சத்துகளும் இல்லாமல் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே தற்போது "டபுள் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி' என வரும் விளம்பரங்களின் மீது நுகர்வோர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும்: மத்திய அரசு யோசனை

புதுடெல்லி, மே. 24-
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசு அதற்கு பரிகாரம் காணும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.  
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அபரிதமான சுமையை குறைக்க மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால், மத்திய அரசு தனக்குரிய வரியை குறைக்கலாம். ஆனால் தனக்கு வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே மாநிலங்களிடம் வரியை குறையுங்கள் என்று மத்திய அரசு கூறத்தொடங்கி உள்ளது. டெல்லி, அரியானா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த 10 மாநில முதல்- மந்திரிகளிடம் வரியை குறைக்கும்படி மேலிடத் தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏற்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் முதல்-மாநிலமாக வரியை குறைத்துள்ளது.   மேற்கு வங்கம், மராட்டியம், கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்பார்களா? என்று தெரியவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைப்பார்களா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்தில் பங்குபெற ஜப்பான் ஆர்வம்

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஜப்பான் பங்கு பெற ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால திட்டங்களான மோனோ ரெயில் மற்றும் நகர போக்குவரத்து போன்ற திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
 
நகர மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் கமல்நாத், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே ஜப்பான் கலந்து கொண்டு இருப்பதை குறிப்பிட்டவர், தற்போது இத்திட்டம் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளது. நான்காவது கட்ட நிலையிலும் ஜப்பான் பங்கு பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது.
 
மேலும், மூன்றாம் கட்ட நிலை முடிவடைந்ததும் அடுத்த நிலை தொடங்கப்படும். நான்காவது கட்ட நிலையில் சுமார் 440 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
 
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரெயில் திட்டம் டெல்லி மெட்ரோ ரெயில் திட்டமாகத்தான் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
டெல்லி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளின் கடந்த மூன்று நிலைகளிலும் ஜப்பான் பங்கு பெற்று இருந்தது. இத்திட்டத்திற்கு ஜப்பான் ரூ. 14,000 கோடி கடன் வழங்கியது. அது இத்திட்டத்தின் மொத்த அளவில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 22, 2012

Centum 200/200 Statistics:+2 Results

Centum 200/200 Statistics:




 Mathematics - 2656 Students Scored 200 out of 200
(2720 students in 2011)


 Chemistry - 1444 Students Scored 200 out of 200
(1243 students in 2011)


 Physics - 142 Students Scored 200 out of 200
(646 students in 2011)


Biology - 616 Students Scored 200 out of 200


Computer - 665 Students scored 200/200

Saturday, May 19, 2012

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து கப்பல்

சென்னை: கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையில் ‘‘ராஜ்தரங்’’ என்ற அதிநவீன ரோந்து கப்பலை சேர்க்கும் விழா, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ரோந்து கப்பலை இயக்கி பணியில் சேர்த்தார்.
மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த பேட்டி: ‘ராஜ்தரங்’ என்ற ரோந்து கப்பல் தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாத்தல் மற்றும் கடலோரங்களை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக செயல்படும். இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரோந்து பணியில் கப்பல் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு நிகழும் சம்பவங்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். கடலோர காவல் படையில், தற்போது பணியில் சேர்ந்திருப்பது 8வது அதிநவீன ரோந்து கப்பலாகும்.

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்ளே வந்தனர். இதுபோல், மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, கடலோரங்களை பலப்படுத்த நவீன ரோந்து கப்பல்கள் கடலோர காவல் படையில் சேர்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன் வளத்துறை இணைந்து செயற்கைகோள் மூலம் கடலில் மீன்வளம் அதிகமுள்ள இடங்கள், கடல் எல்லைகள் போன்ற படங்களை எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதும், மீனவர்கள் கடலில் வழித்தவறி போவது தடுக்கப்படும். எல்லைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற விழிப்புணர்வு மீனவர்களுக்கு வரவேண்டும். கடலோர காவல் படை கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலோர காவல் படை மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகு மீது மோதி மீனவர்கள் உயிரிழக்க காரணம், கடலோர காவல் படை கப்பல் இல்லை. அந்த வழியாக சென்ற வேறு ஏதோ ஒரு கப்பல்தான் மீன்பிடி படகு மீது மோதியுள்ளது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Thursday, May 17, 2012

Tamilnadu 12th results 2012 on May 22

Tamilnadu 12th results 2012 on May 22
Tamilnadu 10th Class board examination results will be declared on June 4 and, surprisingly, the results will be out at 1.30 pm and not the usual 9 am as done every year.
Nearly 11.5 lakh students had appeared for board exams under Samacheer Kalvi syllabus last month even as 13,176 boys and 6,393 girls appeared as private candidates. Usually, class 10 results are out in the last week of May, but this time the results were delayed as exams had commenced only in the first week of April.
For the first time, students also appeared for practical examination. And in another first of its kind move, both Plus-2 results of which will be announced on May 22,  and Class 10 mark sheets will carry photographs of students.

Sunday, May 13, 2012

இந்தியாவின் புகழை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு சென்றேன்; தனிப்பட்ட முறையில் செல்லவில்லை: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விளக்கம்

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் தேவையா? என்று நாடெங்கும் பேசப்படுகிறது. இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடம், ஜனாதிபதி ஏன் வெளிநாடு செல்லவேண்டும்? அத்தகைய பயணங்களால் என்ன நன்மை கிடைக்கிறது? ஜனாதிபதி அவசியம் வெளிநாடு செல்ல வேண்டுமா? என்றெல்லாம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கூறியதாவது:-  
 
நான் எம்.எல்.ஏ., மந்திரி, கவர்னர் என்று அரசியலில் பல பதவிகள் வகித்தவள். எனவே அரசு நடைமுறைகள் பற்றி ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை. சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை உயர்த்தும் வகையில் என் வெளிநாட்டு பயணங்கள் அமைந்தன.
 
அரசியல், பொருளாதார ரீதியாக நட்புறவையும், மேம்பாட்டையும் எனது வெளிநாட்டு பயணங்கள் தந்துள்ளன.   நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தொழில் அதிபர்கள் குழுவை அழைத்து சென்றேன். இதன் மூலம் நமக்கு நிறைய முதலீட்டு வாய்ப்புகள் கிடைத்தன.
 
தொழில் அதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைத்தது. பல நாடுகளில் என் முன்னிலையில் தொழில் அதிபர்கள் ஒப்பந்தங்கள் செய்தனர். நான் முதலில் லத்தீன் அமெரிக்கா சென்றபோது என்னுடன் 18 தொழில் அதிபர்கள் வந்தனர். நாளடைவில் இந்த எண்ணிக்கை உயர்ந்தது.
 
சமீபத்தில் நான் தென்ஆப்பிரிக்கா சென்றபோது 60 தொழில் அதிபர்கள் என்னுடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள நிலை பற்றி அறிந்தனர். அங்கு தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்தனர்.  
 
இந்தியாவுக்கும், வெளி நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு ஏற்படவும் என் வெளிநாட்டு பயணங்கள் கைகொடுத்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா பலம்பெற எனது வெளிநாட்டு பயணங்கள் உதவின.
 
இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். நமக்கு உலகின் பல்வேறு நாடுகளின் ஆதரவு தேவை. அந்த வகையில் எனது வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறின. எனது வெளிநாட்டு பயணத்தால்தான் சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் உள்பட பல நாடுகள் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு கொள்கையை கைவிட்டன.
 
இப்படி பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.   உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமானால் இந்திய ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று வருவது அவசியம். வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏற்ப இந்த பயணம் அவசியமாகும்.
 
ஸ்பெயின், தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி சென்றதே இல்லை. அந்த குறையை நான் நிவர்த்தி செய்தேன். கம்போடியா நாட்டுக்கு 50 ஆண்டுக்கு பிறகு சென்ற இந்திய ஜனாதிபதி நான்தான். எனவே இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் கூறினார்.

பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது

விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டு காலனியை சேர்ந்தவர் ஆத்தலான் என்பவரது பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது.

Saturday, May 12, 2012

களைகட்ட துவங்கியது புதுகை இடைத்தேர்தல் "களம்' : அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கியுள்ளதாலும், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்ற அறிவிப்பாலும், தொகுதியில் இடைத்தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது. புதுக்கோட்டை தொகுதி, இ.கம்யூ., எம்.எல்.ஏ., முத்துக்குமரன், ஒரு மாதத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்ததால், ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க.,- ம.தி.மு.க.,- இந்திய கம்யூனிஸ்ட்,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், அ.தி.மு.க.,வும்,- ஐ.ஜே.கே.,வும் வேட்பாளர்களை அறிவித்தன.
போட்டி : தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திக் தொண்டைமான், 15 நாட்களாக தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். ஐ.ஜே.கே.,வோ (இந்திய ஜனநாயகக்கட்சி) மூன்று நாட்களுக்கு முன்தான் வேட்பாளராக சீனிவாசனை அறிவித்தது.
இதனால் தொகுதியில், எந்த கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாததால், தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதுக்கான அறிகுறியே இல்லாமல் இருந்து வந்தது. அரசு இயந்திரம் மட்டும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் காலை முதல், ஐ.ஜே.கே., வேட்பாளர் சீனிவாசன், தனது தீவிர பிரசாரத்தை துவக்கினார். அ.தி.மு.க., வேட்பாளர் ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்று, அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதனால், இடைத்தேர்தல் பரபரப்பின்றி இருந்த புதுக்கோட்டை தொகுதி, நேற்று முதல் களைகட்ட துவங்கியுள்ளது.
தே.மு.தி.க.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா? : தே.மு.தி.க.,வால் அறிவிக்கப்படும் வேட்பாளர், பொது வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்று, பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று, நேற்று முன்தினம், புதுக்கோட்டையில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, "புதுக்கோட்டை நகராட்சி பகுதியில், தி.மு.க.,வுக்கு, 60 ஆயிரம் ஓட்டு உள்ளது. தி.மு.க., புறக்கணித்து விட்டதால் தேர்தலில், தி.மு.க.,வினர் ஓட்டு போடாமல் இருக்கக் கூடாது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாவிட்டாலும், தி.மு.க.,வினர், "49'வை பயன்படுத்தி, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,'' என்று பேசினார். முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடாத நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டுகளை அள்ளிவிடலாம் என்ற நினைப்பில் களமிறங்கும், தே.மு.தி.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலே உள்ளது.
290 "லேப்-டாப்' தயார் : தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று, கலெக்டர் கலையரசி தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இடைத்தேர்தல், 224 ஓட்டுப்பதிவு மையங்களில் நடக்கிறது. ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் முறைகேடுகளை தடுக்கவும், சமூக விரோதிகளை அடையாளம் காணவும், வெப்கேமரா அமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. வெப்கேமரா வைத்தால், அதை கட்டுப்படுத்த, நிகழ்வுகளை பதிவு செய்ய லேப்-டாப்பும், ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் அமைக்க வேண்டும். தற்போது, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்தில், 290 லேப்-டாப்புகள் சேகரித்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
400 ரூபாய் சம்பளம்: தேர்தலின் போது பயன்படுத்தப்படும் லேப்-டாப்களை கையாள கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்காக மாணவருக்கு, 400 ரூபாய் ஊதியம் தர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

3,000 new buses to hit roads in State at a cost of Rs.548 crore

Three thousand new buses will be introduced this year at a cost of Rs.548 crore for the State, and the city will get 250 buses, including 100 mini-buses, Transport Minister V. Senthil Balaji informed the Assembly on Tuesday
The mini-buses will act as a transit transport facility between the residential locality of the commuter and bus stops/train stations. Out of the 3,000, the Chennai State Express Transport Corporation will get 299 buses, Villupuram transport corporation 550 new buses, Salem 301 buses, Coimbatore 530, Kumbakonam 540, Madurai 380 and Tirunelveli 250 buses.
The Minister also said air-conditioned Volvo buses would be operated from all districts to Chennai. In 2012-2013, it has been decided to have services from Madurai and Coimbatore.
The number of scheduled services of the Metropolitan Transport Corporation (MTC) would increase from 3,140 to 3,500. The services of all State transport corporations would be increased from 19,167 to 20,000.
Mr. Balaji also announced an increase in the number of State-owned transport corporations from the present eight to 10. This would be given effect, based on the report of a technical committee to be set up for the purpose.
The State Transport Corporation, Kumbakonam, would be split and a new one based in Srirangam would be established for catering to Tiruchi, Perambalur, Ariyalur and Karur districts. The Kumbakonam-based corporation would serve areas such as Kumbakonam, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Pudukottai, Sivagangai and Ramanathapuram.
The Transport Corporation, Villupuram, would be bifurcated into Transport Corporations — Villupuram and Vellore. The latter would serve Vellore, Kanchipuram and Tiruvallur districts. The government will also provide Rs.13.91 crore to transport corporations to retrieve buses that have been seized.
The ‘travel as you please' scheme which was introduced in Chennai, Coimbatore, Salem, Tiruchi, Madurai and Tirunelveli will also be extended to Vellore, Erode, Tirupur and Tuticorin.
Free smart cards distributed to students by the MTC would be extended to all transport corporations.

Chennai Super Kings stays in the hunt



Chennai Super Kings ride on a brilliant bowling performance by Ben Hilfenhaus to defeat the Delhi Daredevils at the at the MA Chidambaram stadium in Chennai today. Curtsy this win the defending champions keep their hopes alive of making the playoffs. Ben Hilfenhaus bowled brilliantly up front for his 3 for 27 stifling the Daredevils reducing them to 27 for 4 by the end of the power play, a point from which they never really recovered. The Aussie pacer gave the hosts a perfect start when he bowled Virender Sehwag in the very first over of the match
Chasing Just 115 to win the Super Kings started briskly with Michael Hussey and Murali Vijay putting on an opening stand of 75 runs in 61 balls, before Irfan Pathan knocked over Hussey who scored 38 in 32 balls. Murali Vijay was then joined by Suresh Raina and the duo was involved in an unbeaten partnership that took the Super Kings to an easy victory. The Super Kings overcame the modest total by the Daredevils in 15.2 overs losing just 1 wicket. Murali Vijay looked in good touch striking 5 fours and a 6 in his knock of 48, while Suresh Raina scored a breezy 28.
Batting first the Delhi Daredevils were rocked early and could manage just 114 in their allotted 20 overs thanks to a superb opening spell by Ben Hilfenhaus, who bowled with pinpoint accuracy. The Daredevils didn’t look nearly as comfortable setting a target as opposed to chasing, with Captain Virender Sehwag failing for the second time in a row, falling to Ben Hilfenhaus in the very first over for just 4 runs, David Warner, who scored a brilliant hundred against the Deccan Chargers fell soon after chipping tamely to mid-off giving Hilfenhaus 2 wickets in his first 2 overs.
Naman Ojha, then gave Hilfenhaus his 3rd wicket when he gloved a ball down the leg-side into the waiting arms of MS Dhoni. Mahela Jayawardene could manage just 8 runs in 10 balls before he was out to Albie Morkel and by the end of the power-play the Daredevils were crawling at 27 for 4. With the middle order exposed to a quality bowling attack, boundaries were hard to come by and it took 32 balls before the shackles were broken by Venugopal Rao who charged Ravindra Jadeja and lofted him over wide long-on.
Jadeja was taken off after one over, in which he conceded 11, the most expensive in the first ten overs. The Daredevil’s middle order was stifled by the spin twins R Ashwin and Shadab Jakati who were supported well in the field. Venugopal Rao and Yogesh Nagar added 48 at a run-a-ball before Albie Morkel pulled off a stunning catch at short cover to send back Rao for 27 runs in 24 balls.
Daredevils added only 36 in their last five overs giving the Super Kings a relatively easy target for victory. Yogesh Nagar and Irfan Pathan remained not out on 43 and 13 respectively.
Earlier The Chennai Super Kings won the toss and chose to bowl first in contrast to the prevous twelve occasions at the M A Chidambaram Stadium when they had chosen to bat after winning the toss. Captain MS Dhoni expected the pitch to play much the same for the duration of the match and wanted to the deny the strong Daredevil batting lineup a chance to chase.
The Super Kings made just one change to their side, with Shadab Jakati coming in for Yo Mahesh, while the Delhi Daredevils made a couple changes with Andre Russell making way for Roelof van der Merwe and Umesh Yadav returning to the side in place of Shahbaz Nadeem.
Delhi Daredevils:
1 David Warner, 2 Virender Sehwag (capt), 3 Mahela Jayawardene, 4 Naman Ojha (wk), 5 Yogesh Nagar, 6 Venugopal Rao, 7 Irfan Pathan, 8 Roelof van der Merwe, 9 Morne Morkel, 10 Varun Aaron, 11 Umesh Yadav
Chennai Super Kings:
1 Michael Hussey, 2 M Vijay, 3 Suresh Raina, 4 MS Dhoni (capt and wk), 5 Ravindra Jadeja, 6 S Anirudha, 7 Dwayne Bravo, 8 Albie Morkel, 9 R Ashwin, 10 Ben Hilfenhaus, 11 Shadab Jakati
Score Card
Delhi Daredevils innings (20 overs maximum)   R   B   4s  6s   SR
D Warner   c Ashwin b Hilfenhaus   8   9   1  0   88.88
V Sehwag*   b Hilfenhaus   4   2   1   0   200.00
N Ojha†   c †Dhoni b Hilfenhaus   3   11   0   0   27.27
M Jayawardene   c Hussey b Morkel   8   10   1   0   80.00
Y Venugopal Rao   c Morkel b Ashwin   27   24   0   2   112.50
Y Nagar   not out   43   47   1   1   91.48
IK Pathan   not out   13   17   0   0   76.47
Extras (lb 3, w 5) 8
Total (5 wickets; 20 overs) 114  (5.70 runs per over)
To bat RE van der Merwe, M Morkel, VR Aaron, UT Yadav
Fall of wickets 1-5 (Sehwag, 0.5 ov), 2-12 (Warner, 2.1 ov), 3-24 (Ojha, 4.6 ov), 4-24 (Jayawardene, 5.2 ov), 5-72 (Venugopal Rao, 13.2 ov)
Bowling   O   M   R   W   Econ
BW Hilfenhaus   4   0   27  3   6.75 (2w)
JA Morkel   4   0   15   1   3.75 (1w)
DJ Bravo   4   0   22   0   5.50 (2w)
SB Jakati   3   0   19   0   6.33
RA Jadeja   1   0   11   0   11.00
R Ashwin   4   0   17   1   4.25
Chennai Super Kings innings (target: 115 runs from 20 overs) R B 4s 6s SR
MEK Hussey   c Jayawardene b Pathan   38   32   5   1   118.75
M Vijay   not out   48   40   5   1   120.00
SK Raina   not out   28   20   1   2   140.00
Extras (w 1) 1
Total (1 wicket; 15.2 overs)   115 (7.50 runs per over)
Did not bat MS Dhoni*†, RA Jadeja, S Anirudha, DJ Bravo, JA Morkel, R Ashwin, BW Hilfenhaus, SB Jakati
Fall of wickets 1-75 (Hussey, 10.1 ov)
Bowling   O   M   R   W   Econ
M Morkel   4   0   31   0   7.75
UT Yadav   3   0   24   0   8.00 (1w)
VR Aaron   3.2   0   28   0   8.40
RE van der Merwe   3   0   17   0   5.66
IK Pathan   2   0   15   1   7.50

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More