Thursday, May 31, 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்கு பின்னர் அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டெல்லியிலிருந்து

வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, கனிமொழி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, சென்னைக்கு செல்ல கனிமொழிக்கு அனுமதி வழங்கினார். மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் கனிமொழிக்கு விலக்கு அளித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More