Tuesday, May 8, 2012

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

சென்னை, மே.9: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ல் 138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4 பதவிகளில் அடங்கியுள்ள 138 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அதிகாரி-19 இடங்கள், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் 111(28 பின்னடைவு காலி பணியிடங்கள்),வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஸ்டோர் கீப்பர்- 7, தொழிற்சாலை கூட்டுறவு சங்க உதவி மேற்பார்வையாளர்-1 ஆகிய இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஜூன் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது. இந்த பதவிகளுக்கான வயது, கல்வி தகுதிகள், பொது தகவல்கள், தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், வழிகாட்டல்கள், சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களை போட்டி தேர்வாளர்கள் தேர்வாணைய இணையதள முகவரியான www.tnpsc.gov.in மற்றும் www. tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More