Saturday, February 5, 2011

டாஸ்மாக் விற்பனை -தமிழக அரசு குடிமகன்களை வளர்கிறது

ஒரு அரசு மது கடை நிறுவனம்
டாஸ் மாக் விற்பனை மூலம் ரூபாய் 14,152 கோடி வருமானம் அரசுக்கு வந்துள்ளது .இது டாஸ்மாகில் விற்பனை வரி மற்றும் எச்சிஸ் வரி ஆகியவற்றின் மூலம் 6223 கோடிகள் மற்றும் ,7929 கோடிகள் மொத்தம் 14,152 கோடிகள் வருவாய் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது .
டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பால் தமிழக அரசு வருவாய் . தமிழக குடிமகன்களை வளர்கிறது . குடும்ப பெண்மணிகளுக்கு குடும்பம் நடத்துவதில் சிரம்மம் . அல்லது குடும்பம் உறுப்பினர்கள் அனைவரும் டாஸ்மாக் செல்லும் காலம் வரும் . இளைஞ்சர்கள் மதுவுக்கு அடிமை அவது அதிகரித்துள்ளது .
டாஸ்மாக் அருகில் பார்கள் நடத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துள்ளது .
முன்பெல்லாம் மது கடை செல்வது கேவலம் என்ற நிலைமை மாறி டாஸ்மாக் , பார் என்று நாகரிகமாக மாறிஉள்ளது .
அரசாங்கமும் இந்த நாகரிகமான தொழில் மூலம் வருவாய் பெற்று ஆட்சி செய்து பிளைப்பு நடத்துகிறது . இதை பார்த்து அண்டை மாநிலமும் நடத்த யோசிக்கிறது .
கோவில் . சர்ச் ,மசூதி ,பொது பேருந்து நிலையம் , மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடை திறப்பதால் அந்த பகுதியில் பகல் நேரத்தில் குடிமகன்களில் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையால் மாணவர்கள் ,மாணவிகள் பள்ளியை விட்டு வீட்டு திரும்பும்போது குடிமகன்களால் தொந்தரவு அதிகரித்துள்ளது.
பார் வசதிகள் இல்லாத டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி டாஸ்மாக் கடை வாசல் ,ரோடு ,பக்கத்தில் குடி இருபவர்கள் வீடுகள் முன் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது .
சட்டம் ஒழுங்கு பார்க்கும் போலீஸ் காரர்கள் டாஸ்மாக் கஸ்டமர் .
டாஸ்மாக் தமிழகத்தின் ஒரு அங்கமாகிவிட்டது .
இதனை யார் வந்தும் மாற்ற முடியாது யென்கிற நிலை.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More