Thursday, May 31, 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்கு பின்னர் அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டெல்லியிலிருந்து

வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, கனிமொழி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, சென்னைக்கு செல்ல கனிமொழிக்கு அனுமதி வழங்கினார். மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் கனிமொழிக்கு விலக்கு அளித்தார்.

ரூ.28 லட்சத்துக்கு புது பைக் வாங்கினார் டோனி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் டோனி.
 
இதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த 'புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பெருமை பெறுகிறார் டோனி. விளையாட்டு வீரர்களில், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காமிடம் இந்த வகை பைக் உள்ளது.
 
புதிய பைக் குறித்து டோனியின் உறவினர் கவுதம் குப்தா கூறுகையில், 'ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் டோனி 'ஹெல்கேட்' பைக்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். இந்த பைக்கை ராஞ்சிக்கு எடுத்து வருவதற்காக தற்போது டில்லி சென்றுள்ளார் டோனி. மிக விரைவில் பைக்குடன் டோனி ராஞ்சி திரும்ப உள்ளார்' என்றார். 

Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம்.

கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி மழையில் புரண்டு கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

நடந்து முடிந்த 5வது ஐபிஎல் தொடரிலும் தாறுமாறாக வசூல் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குறிப்பாக டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 180 கோடி பணத்தைப் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பல சர்ச்சைகளையும் பார்க்கத் தவறவி்ல்லை ஐந்தாவது ஐபிஎல் தொடர். ஆனால் இதனால் ஐபிஎல்லுக்கு வர வேண்டிய வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், கிரிக்கெட் மீதான மக்களின் மோகம் அந்த அளவுக்கு இருப்பதால்.

டிவி ஒளிபரப்பு மூலம் 16 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்துள்ளனர். மேலும் ரூ. 180 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

கொலைவெறியுடன் கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகையில், வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறுகி்ன்றனர்.

கடந்த ஆண்டு சமச்சீர் கல்விக் குழப்பத்தால் பள்ளிகள் மறு திறப்பு தாமதமானது. இந்த ஆண்டு வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, May 26, 2012

அரிசியில் கவனம்

அரிசியில் கவனம்

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு "டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் மிக முக்கிய உணவாக, அரிசி உணவையே நாள் தோறும் உண்கின்றனர். எனவே அவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிக அளவில் கிலைசிமிக்ஸ் இன்டக்ஸ் உள்ளது. அதில் எந்த சத்துகளும் இல்லாமல் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே தற்போது "டபுள் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி' என வரும் விளம்பரங்களின் மீது நுகர்வோர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்துவிட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என அறிவித்தது. தொடர்ந்து பா.ம.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது. முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வும் போட்டியிடாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஐக்கிய ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட கட்சி தலைராக இருக்கும் சீனிவாசன் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும்: மத்திய அரசு யோசனை

புதுடெல்லி, மே. 24-
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசு அதற்கு பரிகாரம் காணும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.  
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அபரிதமான சுமையை குறைக்க மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால், மத்திய அரசு தனக்குரிய வரியை குறைக்கலாம். ஆனால் தனக்கு வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே மாநிலங்களிடம் வரியை குறையுங்கள் என்று மத்திய அரசு கூறத்தொடங்கி உள்ளது. டெல்லி, அரியானா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த 10 மாநில முதல்- மந்திரிகளிடம் வரியை குறைக்கும்படி மேலிடத் தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏற்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் முதல்-மாநிலமாக வரியை குறைத்துள்ளது.   மேற்கு வங்கம், மராட்டியம், கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்பார்களா? என்று தெரியவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைப்பார்களா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்தில் பங்குபெற ஜப்பான் ஆர்வம்

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஜப்பான் பங்கு பெற ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால திட்டங்களான மோனோ ரெயில் மற்றும் நகர போக்குவரத்து போன்ற திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
 
நகர மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் கமல்நாத், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே ஜப்பான் கலந்து கொண்டு இருப்பதை குறிப்பிட்டவர், தற்போது இத்திட்டம் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளது. நான்காவது கட்ட நிலையிலும் ஜப்பான் பங்கு பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது.
 
மேலும், மூன்றாம் கட்ட நிலை முடிவடைந்ததும் அடுத்த நிலை தொடங்கப்படும். நான்காவது கட்ட நிலையில் சுமார் 440 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
 
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரெயில் திட்டம் டெல்லி மெட்ரோ ரெயில் திட்டமாகத்தான் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
டெல்லி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளின் கடந்த மூன்று நிலைகளிலும் ஜப்பான் பங்கு பெற்று இருந்தது. இத்திட்டத்திற்கு ஜப்பான் ரூ. 14,000 கோடி கடன் வழங்கியது. அது இத்திட்டத்தின் மொத்த அளவில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 22, 2012

Centum 200/200 Statistics:+2 Results

Centum 200/200 Statistics:




 Mathematics - 2656 Students Scored 200 out of 200
(2720 students in 2011)


 Chemistry - 1444 Students Scored 200 out of 200
(1243 students in 2011)


 Physics - 142 Students Scored 200 out of 200
(646 students in 2011)


Biology - 616 Students Scored 200 out of 200


Computer - 665 Students scored 200/200

Saturday, May 19, 2012

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து கப்பல்

சென்னை: கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையில் ‘‘ராஜ்தரங்’’ என்ற அதிநவீன ரோந்து கப்பலை சேர்க்கும் விழா, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ரோந்து கப்பலை இயக்கி பணியில் சேர்த்தார்.
மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த பேட்டி: ‘ராஜ்தரங்’ என்ற ரோந்து கப்பல் தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாத்தல் மற்றும் கடலோரங்களை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக செயல்படும். இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரோந்து பணியில் கப்பல் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு நிகழும் சம்பவங்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். கடலோர காவல் படையில், தற்போது பணியில் சேர்ந்திருப்பது 8வது அதிநவீன ரோந்து கப்பலாகும்.

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்ளே வந்தனர். இதுபோல், மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, கடலோரங்களை பலப்படுத்த நவீன ரோந்து கப்பல்கள் கடலோர காவல் படையில் சேர்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன் வளத்துறை இணைந்து செயற்கைகோள் மூலம் கடலில் மீன்வளம் அதிகமுள்ள இடங்கள், கடல் எல்லைகள் போன்ற படங்களை எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதும், மீனவர்கள் கடலில் வழித்தவறி போவது தடுக்கப்படும். எல்லைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற விழிப்புணர்வு மீனவர்களுக்கு வரவேண்டும். கடலோர காவல் படை கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலோர காவல் படை மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகு மீது மோதி மீனவர்கள் உயிரிழக்க காரணம், கடலோர காவல் படை கப்பல் இல்லை. அந்த வழியாக சென்ற வேறு ஏதோ ஒரு கப்பல்தான் மீன்பிடி படகு மீது மோதியுள்ளது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

நாமக்கலில் வருவாய் அதிகாரி வீட்டில் ரெய்டு


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அதிகாரி ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, அதிகாரி ராணி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிகாரி ராணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார்.

சென்னை : நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார். கார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் பலர் கருப்பு பிலிம் ஒட்டுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாதபடியும் கருப்பு பிலிம்களை ஒட்டுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கடத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு தப்பி செல்கின்றனர். இதுதொடர்பான வழக்கில், கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. காரின் முன், பின் பக்க கண்ணாடிகள் 70 சதவீத ஊடுருவு திறன், ஜன்னல் கண்ணாடி 50 சதவீத ஊடுருவு திறனுடன் இருக்க வேண்டும். கூலிங் என்ற பெயரில் இதைவிட அதிக கருமையான பிலிம்களை ஒட்டுவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இந்த உத்தரவு முதலில் அமல்படுத்தப்பட்டது. பெங்களூரில் கார்களில் கருப்பு பிலிம் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் அமல்படுத்தப்பட்டது.

முதல் 2 நாட்கள் கார் டிரைவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. கார்களில் ஒட்டியிருக்கும் பிலிம்களை அகற்றும்படி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தனர். எனினும், பலர் கருப்பு பிலிம்களை  அகற்றவில்லை. போலீஸ் வாகனங்களும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறுகையில், கார்களில் கருப்பு நிற பிலிம்களை மாற்றாத வாகன ஓட்டிகளுக்கு முதலில் ரூ.100, பின்னர் ரூ.300 அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து கருப்பு பிலிம்களுடன் கார் ஓட்டினால் அவர்கள் மீது வேறு நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளித்தால், காருக்குள் நடக்கும் சமூகவிரோத செயல்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும். போலீசாரும், உயர் அதிகாரிகளும் தங்களது காரில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை கட்டாயம் அகற்ற வேண்டும். இல்லை என்றால் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி ஆதரிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி


குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து தேவை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சரத் பவாரும் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு பலம் இல்லை. சங்மா தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை தங்கள் கட்சி

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Friday, May 18, 2012

மதன்-ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார்

சென்னை: ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக கேஸ்: இந்தியா விரைவில் ஒப்பந்தம்

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. Ôஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய கூடாது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் உள்ளதுÕ என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், துருக்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கேஸ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கேஸ் கொண்டு வர பைப் லைன் அமைக்கும் திட்டத்துக்கு இந்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிராந்திய அளவில் உறவு மேம்படும் என்று அமெரிக்க உள்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மே 23 அல்லது 24ம் தேதி இந்தியாவின் கெய்ல் நிறுவனமும் துருக்மேனிஸ்தானின் தேசிய ஆயில் நிறுவனம் டர்னெனும் கையெழுத்திட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, துருக்மேனிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கல்கிநிஷ் ஆயில் கிணற்றில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார், பாகிஸ்தானின் முல்தான் நகர் வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸில்கா என்ற பகுதிக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு வரப்படும். இதற்காக 1,680 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்படும். குழாய் மூலம் கொண்டு வரப்படும் கேஸை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.

Thursday, May 17, 2012

Tamilnadu 12th results 2012 on May 22

Tamilnadu 12th results 2012 on May 22
Tamilnadu 10th Class board examination results will be declared on June 4 and, surprisingly, the results will be out at 1.30 pm and not the usual 9 am as done every year.
Nearly 11.5 lakh students had appeared for board exams under Samacheer Kalvi syllabus last month even as 13,176 boys and 6,393 girls appeared as private candidates. Usually, class 10 results are out in the last week of May, but this time the results were delayed as exams had commenced only in the first week of April.
For the first time, students also appeared for practical examination. And in another first of its kind move, both Plus-2 results of which will be announced on May 22,  and Class 10 mark sheets will carry photographs of students.

Tuesday, May 15, 2012

தமிழகத்திற்குப் புகழ் சேர்க்கும் ராணுவப் பயிற்சிப் பள்ளி!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளி என்றழைக்கப்படும் ராணுவ பயிற்சி பள்ளி அகில இந்திய அளவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் பள்ளியாக விளங்கி வருகிறது. 

வசதியானவர்கள் மட்டுமே ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக ஆக முடியும் என்கிற நிலைமையை மாற்றி சாமான்ய மாணவர்களும் உயர் அதிகாரிகளாகும் வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு 1969-ம் ஆண்டு அப்போதையை ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் முயற்சியால் இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் தற்போது 29 சைனிக் பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. இதில் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி 1969-ல் துவங்கப்பட்டதாகும். தற்போது 50 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டத்திற்கு இந்தப் பள்ளி தயாராகி வருகிறது. 1969-ம் ஆண்டு வெறும் 98 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 650 மாணவர்கள் படித்து வருகின்றனர்.6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்து வரும் இப்பள்ளி மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகள், குதிரையேற்றப் பயிற்சிகள், மலையேற்றப் பயிற்சிகள், பாராசூட் பயிற்சி, கப்பல், விமானம் மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் இது போக கராத்தே, நீச்சல், தடகளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.சைனிக் பள்ளி நிர்வாகம், 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் ர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இது தவிர, உடல் தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது. விடுதியிலேயே தங்கிப் பயிலும் இந்த மாணவர்களுக்கு என்டிஏ (நேஷனல் டிபென்ஸ் அகாடமி) தேர்வும் நடத்தப்படுகிறது.கேன் டூ இட் (Can do it) எதையும் செய்து முடி என்ற தாரக மந்திரத்துடன் பயின்று வரும் இப்பள்ளி மாணவர்களுக்கு ராணுவக் கட்டுப்பாடுகளுடன் கல்வி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியுள்ளனர். பலர் அரசு உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, தேசிய அகாடமிக்கு அதிக அளவிலான மாணவர்கள் இந்தப் பள்ளியிலிருந்து ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.பள்ளி முதல்வராக கேப்டன் சந்தீப் சக்ரவர்த்தி பணியாற்றி வருகிறார். பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:04252-256246, 04252-256296. மேலும் விபரங்களுக்கு www.sainikschoolamaravathinagar.edu.in என்ற வெப்சைட் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு

ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.

இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில்
எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.

என்.ஐ.டி.யில் எம்.டெக்., எம்.பிளான் சேர்க்கை அறிவிப்பு

இந்தியாவில் திருச்சி, வாரங்கல், பாட்னா உள்ள 21 தேசிய தொழில்நுட்ப மையங்களில் (என்ஐடி) வழங்கப்படும் எம்.டெக்., எம்.பிளான்., படிப்புகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இ செல்லான் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 25ம், இதர வழிகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 29ம் கடைசி நாளாகும்.பொதுக் கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படும். ஸ்கோர் அல்லது கேட் தேர்வு மதிப்பெண்களும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு www.ccmt.in இணையதளத்தைப் பார்க்கவும்.

ஜிப்மரில் மே 27ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு

புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இந்நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அனுமதிச் சீட்டையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.மே 27-ம் தேதி பெங்களூர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, புதுச்சேரி, புணே, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய மையங்களில் நடைபெறும். தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மருத்துக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.ஆன்லைனில் அனுமதிச் சீட்டுப் பெற ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்

சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.

• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.

• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் ஜீன்-மார்க் அய்ரால்ட்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன்-மார்க் அய்ரால்ட் நியமிக்கபடுவதாக  பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக  நேற்று  பதவியேற்றுக் கொண்ட பிரான்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
 
முதல் காபினெட் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தன் அமைச்சரைவையை இன்று அமைக்கிறார்.62 வயதான  ஜீன்-மார்க் அய்ரால்ட் இதுவரை உயர் பதவிகளை வகித்ததில்லை, மேலும் உயர் நிலை நிர்வாக அனுபவமும் இல்லை.ஆனால் நீண்ட நாட்களாக கட்சி தலைமையுடன் தொடர்பு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் 1977 ம் ஆண்டு பிரான்சின் வடமேற்கு நகரான செயின்ட் ஹீர்பிலைன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றிவருகிறார்.
 
1997ம் ஆண்டு நண்டேஸ் நகரில் முனிசிபல் பிரிண்டிங் கான்ட்ராட் ஒன்று தன் கட்சிக்கு தொடர்புடைய ஒருவருக்கு ஓதிக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆறு மாத காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டு 30,000 ப்ராங்க் அபதாரம் விதிக்கப்பட்டது. ஆனால் 2007 ம் ஆண்டு அதிகார பூர்வமாக இக்குற்றச்சாட்டு விலக்கிகொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, May 13, 2012

இந்தியாவின் புகழை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு சென்றேன்; தனிப்பட்ட முறையில் செல்லவில்லை: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விளக்கம்

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் தேவையா? என்று நாடெங்கும் பேசப்படுகிறது. இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடம், ஜனாதிபதி ஏன் வெளிநாடு செல்லவேண்டும்? அத்தகைய பயணங்களால் என்ன நன்மை கிடைக்கிறது? ஜனாதிபதி அவசியம் வெளிநாடு செல்ல வேண்டுமா? என்றெல்லாம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கூறியதாவது:-  
 
நான் எம்.எல்.ஏ., மந்திரி, கவர்னர் என்று அரசியலில் பல பதவிகள் வகித்தவள். எனவே அரசு நடைமுறைகள் பற்றி ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை. சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை உயர்த்தும் வகையில் என் வெளிநாட்டு பயணங்கள் அமைந்தன.
 
அரசியல், பொருளாதார ரீதியாக நட்புறவையும், மேம்பாட்டையும் எனது வெளிநாட்டு பயணங்கள் தந்துள்ளன.   நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தொழில் அதிபர்கள் குழுவை அழைத்து சென்றேன். இதன் மூலம் நமக்கு நிறைய முதலீட்டு வாய்ப்புகள் கிடைத்தன.
 
தொழில் அதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைத்தது. பல நாடுகளில் என் முன்னிலையில் தொழில் அதிபர்கள் ஒப்பந்தங்கள் செய்தனர். நான் முதலில் லத்தீன் அமெரிக்கா சென்றபோது என்னுடன் 18 தொழில் அதிபர்கள் வந்தனர். நாளடைவில் இந்த எண்ணிக்கை உயர்ந்தது.
 
சமீபத்தில் நான் தென்ஆப்பிரிக்கா சென்றபோது 60 தொழில் அதிபர்கள் என்னுடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள நிலை பற்றி அறிந்தனர். அங்கு தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்தனர்.  
 
இந்தியாவுக்கும், வெளி நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு ஏற்படவும் என் வெளிநாட்டு பயணங்கள் கைகொடுத்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா பலம்பெற எனது வெளிநாட்டு பயணங்கள் உதவின.
 
இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். நமக்கு உலகின் பல்வேறு நாடுகளின் ஆதரவு தேவை. அந்த வகையில் எனது வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறின. எனது வெளிநாட்டு பயணத்தால்தான் சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் உள்பட பல நாடுகள் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு கொள்கையை கைவிட்டன.
 
இப்படி பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.   உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமானால் இந்திய ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று வருவது அவசியம். வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏற்ப இந்த பயணம் அவசியமாகும்.
 
ஸ்பெயின், தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி சென்றதே இல்லை. அந்த குறையை நான் நிவர்த்தி செய்தேன். கம்போடியா நாட்டுக்கு 50 ஆண்டுக்கு பிறகு சென்ற இந்திய ஜனாதிபதி நான்தான். எனவே இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் கூறினார்.

பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது

விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டு காலனியை சேர்ந்தவர் ஆத்தலான் என்பவரது பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது.

Saturday, May 12, 2012

களைகட்ட துவங்கியது புதுகை இடைத்தேர்தல் "களம்' : அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கியுள்ளதாலும், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்ற அறிவிப்பாலும், தொகுதியில் இடைத்தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது. புதுக்கோட்டை தொகுதி, இ.கம்யூ., எம்.எல்.ஏ., முத்துக்குமரன், ஒரு மாதத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்ததால், ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க.,- ம.தி.மு.க.,- இந்திய கம்யூனிஸ்ட்,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், அ.தி.மு.க.,வும்,- ஐ.ஜே.கே.,வும் வேட்பாளர்களை அறிவித்தன.
போட்டி : தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திக் தொண்டைமான், 15 நாட்களாக தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். ஐ.ஜே.கே.,வோ (இந்திய ஜனநாயகக்கட்சி) மூன்று நாட்களுக்கு முன்தான் வேட்பாளராக சீனிவாசனை அறிவித்தது.
இதனால் தொகுதியில், எந்த கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாததால், தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதுக்கான அறிகுறியே இல்லாமல் இருந்து வந்தது. அரசு இயந்திரம் மட்டும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் காலை முதல், ஐ.ஜே.கே., வேட்பாளர் சீனிவாசன், தனது தீவிர பிரசாரத்தை துவக்கினார். அ.தி.மு.க., வேட்பாளர் ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்று, அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதனால், இடைத்தேர்தல் பரபரப்பின்றி இருந்த புதுக்கோட்டை தொகுதி, நேற்று முதல் களைகட்ட துவங்கியுள்ளது.
தே.மு.தி.க.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா? : தே.மு.தி.க.,வால் அறிவிக்கப்படும் வேட்பாளர், பொது வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்று, பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று, நேற்று முன்தினம், புதுக்கோட்டையில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, "புதுக்கோட்டை நகராட்சி பகுதியில், தி.மு.க.,வுக்கு, 60 ஆயிரம் ஓட்டு உள்ளது. தி.மு.க., புறக்கணித்து விட்டதால் தேர்தலில், தி.மு.க.,வினர் ஓட்டு போடாமல் இருக்கக் கூடாது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாவிட்டாலும், தி.மு.க.,வினர், "49'வை பயன்படுத்தி, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,'' என்று பேசினார். முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடாத நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டுகளை அள்ளிவிடலாம் என்ற நினைப்பில் களமிறங்கும், தே.மு.தி.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலே உள்ளது.
290 "லேப்-டாப்' தயார் : தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று, கலெக்டர் கலையரசி தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இடைத்தேர்தல், 224 ஓட்டுப்பதிவு மையங்களில் நடக்கிறது. ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் முறைகேடுகளை தடுக்கவும், சமூக விரோதிகளை அடையாளம் காணவும், வெப்கேமரா அமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. வெப்கேமரா வைத்தால், அதை கட்டுப்படுத்த, நிகழ்வுகளை பதிவு செய்ய லேப்-டாப்பும், ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் அமைக்க வேண்டும். தற்போது, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்தில், 290 லேப்-டாப்புகள் சேகரித்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
400 ரூபாய் சம்பளம்: தேர்தலின் போது பயன்படுத்தப்படும் லேப்-டாப்களை கையாள கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்காக மாணவருக்கு, 400 ரூபாய் ஊதியம் தர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

3,000 new buses to hit roads in State at a cost of Rs.548 crore

Three thousand new buses will be introduced this year at a cost of Rs.548 crore for the State, and the city will get 250 buses, including 100 mini-buses, Transport Minister V. Senthil Balaji informed the Assembly on Tuesday
The mini-buses will act as a transit transport facility between the residential locality of the commuter and bus stops/train stations. Out of the 3,000, the Chennai State Express Transport Corporation will get 299 buses, Villupuram transport corporation 550 new buses, Salem 301 buses, Coimbatore 530, Kumbakonam 540, Madurai 380 and Tirunelveli 250 buses.
The Minister also said air-conditioned Volvo buses would be operated from all districts to Chennai. In 2012-2013, it has been decided to have services from Madurai and Coimbatore.
The number of scheduled services of the Metropolitan Transport Corporation (MTC) would increase from 3,140 to 3,500. The services of all State transport corporations would be increased from 19,167 to 20,000.
Mr. Balaji also announced an increase in the number of State-owned transport corporations from the present eight to 10. This would be given effect, based on the report of a technical committee to be set up for the purpose.
The State Transport Corporation, Kumbakonam, would be split and a new one based in Srirangam would be established for catering to Tiruchi, Perambalur, Ariyalur and Karur districts. The Kumbakonam-based corporation would serve areas such as Kumbakonam, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Pudukottai, Sivagangai and Ramanathapuram.
The Transport Corporation, Villupuram, would be bifurcated into Transport Corporations — Villupuram and Vellore. The latter would serve Vellore, Kanchipuram and Tiruvallur districts. The government will also provide Rs.13.91 crore to transport corporations to retrieve buses that have been seized.
The ‘travel as you please' scheme which was introduced in Chennai, Coimbatore, Salem, Tiruchi, Madurai and Tirunelveli will also be extended to Vellore, Erode, Tirupur and Tuticorin.
Free smart cards distributed to students by the MTC would be extended to all transport corporations.

Chennai Super Kings stays in the hunt



Chennai Super Kings ride on a brilliant bowling performance by Ben Hilfenhaus to defeat the Delhi Daredevils at the at the MA Chidambaram stadium in Chennai today. Curtsy this win the defending champions keep their hopes alive of making the playoffs. Ben Hilfenhaus bowled brilliantly up front for his 3 for 27 stifling the Daredevils reducing them to 27 for 4 by the end of the power play, a point from which they never really recovered. The Aussie pacer gave the hosts a perfect start when he bowled Virender Sehwag in the very first over of the match
Chasing Just 115 to win the Super Kings started briskly with Michael Hussey and Murali Vijay putting on an opening stand of 75 runs in 61 balls, before Irfan Pathan knocked over Hussey who scored 38 in 32 balls. Murali Vijay was then joined by Suresh Raina and the duo was involved in an unbeaten partnership that took the Super Kings to an easy victory. The Super Kings overcame the modest total by the Daredevils in 15.2 overs losing just 1 wicket. Murali Vijay looked in good touch striking 5 fours and a 6 in his knock of 48, while Suresh Raina scored a breezy 28.
Batting first the Delhi Daredevils were rocked early and could manage just 114 in their allotted 20 overs thanks to a superb opening spell by Ben Hilfenhaus, who bowled with pinpoint accuracy. The Daredevils didn’t look nearly as comfortable setting a target as opposed to chasing, with Captain Virender Sehwag failing for the second time in a row, falling to Ben Hilfenhaus in the very first over for just 4 runs, David Warner, who scored a brilliant hundred against the Deccan Chargers fell soon after chipping tamely to mid-off giving Hilfenhaus 2 wickets in his first 2 overs.
Naman Ojha, then gave Hilfenhaus his 3rd wicket when he gloved a ball down the leg-side into the waiting arms of MS Dhoni. Mahela Jayawardene could manage just 8 runs in 10 balls before he was out to Albie Morkel and by the end of the power-play the Daredevils were crawling at 27 for 4. With the middle order exposed to a quality bowling attack, boundaries were hard to come by and it took 32 balls before the shackles were broken by Venugopal Rao who charged Ravindra Jadeja and lofted him over wide long-on.
Jadeja was taken off after one over, in which he conceded 11, the most expensive in the first ten overs. The Daredevil’s middle order was stifled by the spin twins R Ashwin and Shadab Jakati who were supported well in the field. Venugopal Rao and Yogesh Nagar added 48 at a run-a-ball before Albie Morkel pulled off a stunning catch at short cover to send back Rao for 27 runs in 24 balls.
Daredevils added only 36 in their last five overs giving the Super Kings a relatively easy target for victory. Yogesh Nagar and Irfan Pathan remained not out on 43 and 13 respectively.
Earlier The Chennai Super Kings won the toss and chose to bowl first in contrast to the prevous twelve occasions at the M A Chidambaram Stadium when they had chosen to bat after winning the toss. Captain MS Dhoni expected the pitch to play much the same for the duration of the match and wanted to the deny the strong Daredevil batting lineup a chance to chase.
The Super Kings made just one change to their side, with Shadab Jakati coming in for Yo Mahesh, while the Delhi Daredevils made a couple changes with Andre Russell making way for Roelof van der Merwe and Umesh Yadav returning to the side in place of Shahbaz Nadeem.
Delhi Daredevils:
1 David Warner, 2 Virender Sehwag (capt), 3 Mahela Jayawardene, 4 Naman Ojha (wk), 5 Yogesh Nagar, 6 Venugopal Rao, 7 Irfan Pathan, 8 Roelof van der Merwe, 9 Morne Morkel, 10 Varun Aaron, 11 Umesh Yadav
Chennai Super Kings:
1 Michael Hussey, 2 M Vijay, 3 Suresh Raina, 4 MS Dhoni (capt and wk), 5 Ravindra Jadeja, 6 S Anirudha, 7 Dwayne Bravo, 8 Albie Morkel, 9 R Ashwin, 10 Ben Hilfenhaus, 11 Shadab Jakati
Score Card
Delhi Daredevils innings (20 overs maximum)   R   B   4s  6s   SR
D Warner   c Ashwin b Hilfenhaus   8   9   1  0   88.88
V Sehwag*   b Hilfenhaus   4   2   1   0   200.00
N Ojha†   c †Dhoni b Hilfenhaus   3   11   0   0   27.27
M Jayawardene   c Hussey b Morkel   8   10   1   0   80.00
Y Venugopal Rao   c Morkel b Ashwin   27   24   0   2   112.50
Y Nagar   not out   43   47   1   1   91.48
IK Pathan   not out   13   17   0   0   76.47
Extras (lb 3, w 5) 8
Total (5 wickets; 20 overs) 114  (5.70 runs per over)
To bat RE van der Merwe, M Morkel, VR Aaron, UT Yadav
Fall of wickets 1-5 (Sehwag, 0.5 ov), 2-12 (Warner, 2.1 ov), 3-24 (Ojha, 4.6 ov), 4-24 (Jayawardene, 5.2 ov), 5-72 (Venugopal Rao, 13.2 ov)
Bowling   O   M   R   W   Econ
BW Hilfenhaus   4   0   27  3   6.75 (2w)
JA Morkel   4   0   15   1   3.75 (1w)
DJ Bravo   4   0   22   0   5.50 (2w)
SB Jakati   3   0   19   0   6.33
RA Jadeja   1   0   11   0   11.00
R Ashwin   4   0   17   1   4.25
Chennai Super Kings innings (target: 115 runs from 20 overs) R B 4s 6s SR
MEK Hussey   c Jayawardene b Pathan   38   32   5   1   118.75
M Vijay   not out   48   40   5   1   120.00
SK Raina   not out   28   20   1   2   140.00
Extras (w 1) 1
Total (1 wicket; 15.2 overs)   115 (7.50 runs per over)
Did not bat MS Dhoni*†, RA Jadeja, S Anirudha, DJ Bravo, JA Morkel, R Ashwin, BW Hilfenhaus, SB Jakati
Fall of wickets 1-75 (Hussey, 10.1 ov)
Bowling   O   M   R   W   Econ
M Morkel   4   0   31   0   7.75
UT Yadav   3   0   24   0   8.00 (1w)
VR Aaron   3.2   0   28   0   8.40
RE van der Merwe   3   0   17   0   5.66
IK Pathan   2   0   15   1   7.50

ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி


சென்னை, மே 12 : ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம் வெளியிட உள்ளது.

காதுள்ளவன் கேட்கக் கடவன்!

திருத்தேர்களில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் மரணமடைவதும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மின் நிலையம் மூடப்படும் நிலை ஏற்படுவதும் சாதாரண விபத்துகள் என்று கருத முடியவில்லை. இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம்தான்.  தேர்த் திருவிழா நடைபெறும்போது, மின்வாரியத்தின் மூத்த பொறியாளர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் குழு ஒன்று, கோயிலை விட்டுத் தேர் புறப்பட்டு, மீண்டும் நிலைக்குத் திரும்பும் வரை உடன் இருக்கும். தேர் போகும் பாதைகளில் மின்தடை ஏற்படுத்தப்படும். சாலையில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மின்இணைப்புக் கம்பிகளை ஊழியர்கள் கழற்றி வைத்து, தேர் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அந்தக் கம்பிகளைப் பொருத்துவார்கள். ஒவ்வொரு வீதியாகத் தேர் கடந்து செல்லச் செல்ல, கடந்து சென்ற பாதைகளில் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும். இந்தச் சேவைக்காக அந்தக் குழுவுக்குத் தனியாகச் சிறப்புத் தரிசனமும், சிறப்பு மரியாதைகளும் அந்தந்தக் கோயில்களில் உண்டு.  மேலே குறிப்பிட்ட நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவில் உயர்மின்அழுத்தக் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் இறந்திருக்க மாட்டார்கள். விருதுநகர் சென்னங்குடி வெங்கடாசலபதி கோயில் பல்லக்குக் குடைக்கம்பி மின்சாரக் கம்பியில் உரசியபோது 3 இளைஞர்கள் இறந்திருக்க நேரிட்டிருக்காது. அதனால், இந்தச் சம்பவங்கள் மின்வாரியத்தின் மெத்தனப் போக்கு மற்றும் அலட்சியத்தால் நேர்ந்தவைதானே தவிர விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது.  ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர் 56 அடி உயரம் கொண்டது. அத்தகைய தேர் வீதிவலம் வரும்போது, தேர் வரும் பாதையில் மின்சார விநியோகம் தொடர்கிறது என்றால், அதற்கு முழுப் பொறுப்பு மின்வாரிய அதிகாரிகள்தான். மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் அறிவித்ததே தவிர, இந்த மரணத்துக்கு அடிப்படைக் காரணமான மின் ஊழியர்கள் யாரையும் பொறுப்பாக்கவும் இல்லை. நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.  தேருக்கு இந்த நிலைமை என்றால், பல்லக்குக் குடை மின் கம்பியில் உரசி, 3 பேரின் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த அளவுக்கு தாழச் சென்ற மின்கம்பிகளுக்குக் காரணமானவர்கள் யார்? அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை.  ஓர் அரசு விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படும்போது, பந்தல் தீப்பிடித்தால் அணைப்பதற்காக ஒரு தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். மின்கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டால் அதைச் சரி செய்யவும், விழா மேடைக்கு வரும் மின்அளவைச் சரி பார்த்து, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் ஒரு பொறியாளர் தலைமையில் ஒரு குழு நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்பட்டால், ஒரு தாற்காலிக மின்மாற்றியும் நிறுவப்படுகிறது. இவை அனைத்தும் நிகழ்ச்சிக்கு வரும் பிரமுகர்களுக்காக அல்ல. அங்கே கூடும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்காகத்தான். அதே கடமை உணர்வுடன் தேர்த் திருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு குறித்தும் மின்வாரியம் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டாமா?  மின்துறையின் பொறுப்பின்மையின் உச்சகட்டமாக மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தமிழக அரசுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மின்நிலையம் மூடப்படும் நிலைமை உருவானதால், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரட்டைச் செலவு.  அனல்மின் நிலையத்துக்குத் தேவையான எரிபொருளான நிலக்கரியைக் கொண்டு செல்லும் "கன்வேயர் பெல்ட்' தீப்பிடித்து எரிந்ததுதான், மேட்டூர் அனல் மின்நிலையம் முற்றிலுமாகச் சேதம் அடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஓர் அனல் மின்நிலையத்தில், நிலக்கரியைத் தாங்கிச் செல்லும் "கன்வேயர் பெல்ட்' எளிதில் தீப்பற்றக்கூடிய வகையைச் சேர்ந்தது அல்ல. அப்படிப்பட்ட "கன்வேயர் பெல்ட்'டைப் பயன்படுத்த மாட்டார்கள்.  மேலும், அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி என்றும், இவற்றின் எரிதிறன் அதிகம் என்பதாலும், நிலக்கரி வெயிலில் காய்ந்து, ஒன்றோடொன்று உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காரணம் கண்டுபிடிப்பதைப் போன்ற அபத்தம் வேறு ஏதும் இல்லை. இந்த நிலக்கரி எரிதிறன் அதிகமும் சாம்பல் குறைவும் உள்ள ரகம் என்பதால் இவை உடனே தீப்பற்றக்கூடியவை என்று சொல்லப்படும் வாதத்தை, உண்மை அறிந்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த நிலக்கரி அப்படியொன்றும் சாணத்துக்குள் வைத்து ஓலைக் குடிசைகளின் கூரையில் வீசப்படும் "பாஸ்பரஸ்' அல்ல, காய்ந்தவுடன் எரிவதற்கு; கந்தக உருண்டைகளும் அல்ல, உரசியதும் தீப்பற்றிக்கொள்ள! ஆனாலும் இத்தகைய புனைச்சுருட்டுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்மையை மறைக்கப் பார்க்கிறது மின்வாரியம்.  அவர்கள் சொல்வதைப்போன்றே, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெயிலில் காய்ந்து சிறு உராய்வில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்றால், அந்த நிலக்கரி வெயிலில் காயாதபடி சிறப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டாமா? பாதுகாப்பாக நிலக்கரியைக் கையாளாதது யார் குற்றம்? பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகக் காரணமான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?  திருத்தேர் செல்லும் பாதைகளில் மின்சாரம் இருப்பதும், மேட்டூர் அனல் மின்நிலையம் திடீரென்று எரிவதும் வெறும் விபத்து என்று தட்டிக் கழிப்பதற்கில்லை. ஒன்று, மின்வாரியத்தின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக இருக்க முடியும் அல்லது, மின்வாரிய ஊழியர் அமைப்புகளுக்குள், அல்லது அவர்களை வைத்து நடைபெறும் மின்அரசியலாகவும் இருக்கக்கூடும்.  காதுள்ளவன் கேட்கக் கடவன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More