Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம்.

கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி மழையில் புரண்டு கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

நடந்து முடிந்த 5வது ஐபிஎல் தொடரிலும் தாறுமாறாக வசூல் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குறிப்பாக டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 180 கோடி பணத்தைப் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பல சர்ச்சைகளையும் பார்க்கத் தவறவி்ல்லை ஐந்தாவது ஐபிஎல் தொடர். ஆனால் இதனால் ஐபிஎல்லுக்கு வர வேண்டிய வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், கிரிக்கெட் மீதான மக்களின் மோகம் அந்த அளவுக்கு இருப்பதால்.

டிவி ஒளிபரப்பு மூலம் 16 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்துள்ளனர். மேலும் ரூ. 180 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More