Friday, June 1, 2012

ஆனந்துக்கு ரூ.2 கோடி: முதல்வர்

சென்னை, ஜூன் 1: உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More