Monday, October 24, 2022

25.10.2022 செய்திகள் ஒரு கண்ணோட்டம்

25.10.2022
 செய்திகள் ஒரு  கண்ணோட்டம் 1.இந்தியா எப்போதும் போரை விரும்புவதில்லை என்றும் அதே சமயம் அமைதியை பராமரிப்பதில் படைபலம் அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையை ஒட்டி  பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவது தீபாவளி என்று கூறியவர் பாதுகாப்பு படைகளின் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலை வணங்குவதாக தெரிவித்தார் இந்திய ராணுவத்தின் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல் ஒன்றை பாடி பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்துள்ளார்

2. ஐநாவின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் 


3.மழைநீர் வடிகால் பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .



3.சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது.

இந்தியாவில் சூரிய கிரகணம் இன்று மாலை மணி 4 29 முதல் மணி ஐந்து நாற்பத்தி இரண்டு வரை நிகழ உள்ளது இது பகுதி சூரிய கிரகணம் நாட்டின் அனைத்து இடங்களிலும் தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் தமிழகத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காண முடியும்

யாரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டும் என்பதோ அந்த சமயத்தில் உணவை அருந்தி என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை இதனையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் காலை மணி 8 11 முதல் இரவு 7 மணி வரை மூடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது கிரகணத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நடை சாத்தப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது

4.பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

     

5.அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்மா சூரசங்காரம் வரும் 30ஆம் தேதி மாலை கோவில் கடற்கரையில் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்கான பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

 6. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

7.காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நகரின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கினார்.
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More